பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியும் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2017 (சனிக்கிழமை)
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்று ஆண் மற்றும் பெண்களுக்காக மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது.
பெண்களுக்கான மரதன் ஓட்டம் பொலிகண்டி சந்தியில் ஆரம்பித்து, வல்வெட்டித்துறை – தொண்டைமானாறு வீதியூடாக வல்வெட்டித்துறை ஆலடி வந்தடைந்து மீண்டும் வல்வெட்டித்துறை சந்தி வந்தடைந்து.
மரதன் ஓட்டப் போட்டியில் 14 பெண்கள் பங்குபற்றி அனைவரும் ஓட்டத்தினை நிறைவு செய்திருந்தார்கள்.
1 ஆம் இடம் பி.பிருந்திகா - 2KM 600M தூரத்தினை 11 நிமிடம் 36 செக்கனில் நிறைவு செய்திருந்தார் - (ரேவடி நேதாஜி விளையாட்டுக் கழகம்)
2 ஆம் இடம் அ. கார்த்திகா - 2KM 600M தூரத்தினை 11 நிமிடம் 39 செக்கனில் நிறைவு செய்திருந்தார் - (உதயசூரியன் விளையாட்டுக் கழகம்)
3 ஆம் இடம் சி. பவித்திரா - 2KM 600M தூரத்தினை 12 நிமிடம் 46 செக்கனில் நிறைவு செய்திருந்தார் - (இளங்கதிர் விளையாட்டுக் கழகம்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.