பேஸ்புக் நிறுவனத்திடம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2018 (வியாழக்கிழமை)
கலவரங்களைத் தூண்டும் செய்திகள் தொடர்பாக வேகமான நடவடிக்கை எடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் உறுதியளிக்கும் வரை நாட்டில் பேஸ்புக் வலைத்தளம் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கும் அதிகாரிகள் கடந்த செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற இனக் கலவரத்தையடுத்து பேஸ்புக் வலைத்தளம் நாடு பூராவும் தடை செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத் தளங்களில் பரவியிருந்த வன்முறையை தூண்டும் பேச்சே கடந்த வாரம் இடம்பெற்ற குழப்பநிலைக்கு காரணம் என போலீசார் அறிவித்துள்ளனர். குறித்த வன்முறையால் பள்ளி வாசல்களும் முஸ்லீம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்களும் எரியூட்டப்பட்டன.
அவசர கால தடைச் சட்டத்தை அமுல் படுத்திய அரசாங்கம் கலகத்தை அடக்க இராணுவத்தையும் பணித்திருந்தனர். கலகத்தில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டனர் (AFP)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.