உங்கள் வாழ்க்கை முழுதும் உள்ள சமூக வலையமைப்பான பேஸ்புக் நீங்கள் இறந்த பின்பும் இனி உங்களுடன் இருக்க முடிவெடுத்துள்ளது. உலகின் மிகவும் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் தனது அடுத்த படிக்கு சென்றுள்ளது. இதன்
பிரகாரம் தற்போதைய பேஸ்புக் பாவனையாளர்கள், தமக்கு வேண்டிய யாராவது ஒருவரை உங்களின் ‘சட்டபூர்வ தொடர்பாளர்” (Legacy contact) ஆக நியமிப்பதன் மூலம், அவர் நீங்கள் இறந்த பின்பு உங்கள் பேஸ்புக் கணக்கை கையகப்படுத்தி, மரணத்திற்கு பிந்திய செய்திகளை பிரசுரிக்க முடியும்.
இது நாள் வரை மேல் உள்ளதற்கு பதிலாக “Memorial page” என்னும் விடயமே பேஸ்புக் இல் இருந்துவந்தது. இதன் மூலம் ஒருவர் இறந்தது உறுதி செய்யப்பட்டால் குறித்தவரின் பேஸ்புக் பக்கம் “Memorial page” ஆக மாற்றப்பட்டுவந்ததும் இதனை மேற்கொண்டு எவரும் பாவிக்கமுடியாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.