13000 TEUS கப்பல்கள் பயணிக்கவல்ல அகலப்படுத்தப்பட்ட பனமா கால்வாய் திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2016 (திங்கட்கிழமை)
கடந்த 10 ஆண்டுகளாக அகல மற்றும் ஆழப்படுத்தப்பட்ட பனாமா கால்வாய் (expanded Panama Canal) நேற்று ஞாயிற்றுக் கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவிற்குச் சொந்தமான Cosco Shipping Panama என்னும் கொள்கலன் கப்பல், 50 கடல் மைல்கள் நீளமான கரீபியன் (Caribbean) கடற்பக்கம் அமைந்துள்ள இந்தக் கால்வாயில் நேற்று பயணித்தது.
கடந்த 10 வருடங்களாக, 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் பசுபிக் மற்றும் அத்திலாண்டிக் சமுத்திரங்களை கடற்பகுதில் மேலும் இலகுவாக இணைக்கப்படுவது உலக வர்த்தகத்தில் ஒரு புதிய தசாப்தத்திற்கு வழி வகுக்கும் எனக் கூறப்படுகின்றது.
புதிய கால்வாய் வழி 13000 எண்ணிக்கையுடைய 20 அடி நீளமான கொள்கலன்கள் கொள்ளளவு உடைய கொள்கலன் கப்பல்கள் (13000 TEUS Container ships) செல்ல வழி வகுத்துள்ளது. இதுவரை பனாமா கால்வாய் வழி 5500 எண்ணிக்கையுடைய 20 அடி நீளமான கொள்கலன்கள் கொள்ளளவு உடைய கொள்கலன் கப்பல்களே பயணித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வைப் பார்ப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.
இதனுடன் தொடர்புடைய எமது முன்னைய செய்திகள்
1) அகலப்படுத்தப்பட்ட பனாமா கால்வாய் அடுத்த வருடம் திறக்கப்படும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.