கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வல்வை நகரசபையில் போட்டியிட்ட எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்கக்கூடிய வகையில் பெரும்பான்மையைக் பெறவில்லை. ஆட்சி அமைக்க 9 உறுப்பினர் தேவை என்ற நிலையில் 7 உறுப்பினர்களைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் 4 உறுப்பினர்களைப் பெற்றுள்ள சுயேட்சைக் குழுவும் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ள போதிலும் 2 வருடங்களுக்கு இரண்டு கட்சிகளுக்கும் தலைவர் பதவி என்பதில் ஒரு இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இதேவேளை ஈ.பி.டி.பி தவிர்ந்த அ.இ.த.கா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய மூன்றும் சுயேட்சை தனியாக ஆட்சியமைக்க முன்வந்தால் சுயேட்சைக்கு ஆதரவளிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் இது பக்க சார்பற்ற முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை. அவ்வாறு நிகழுமேயானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட சுயேட்சைக் கூட்டணி ஒரு ஆசனம் கூடுதலாக 8 உறுப்பினர்களைப் பெறும்.
ஆகவே மீதமுள்ள 2 ஆசனங்களைப் பெற்றுள்ள ஈ.பி.டி.பி ஆதரவளிக்கும் கூட்டணியே வல்வை நகரசபையில் ஆட்சி அமைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகக் கூடிய ஏதுநிலை உருவாகிவருகின்றது.
ஏற்கனவே ஈ.பி.டி.பி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு என்ற நிலை தோன்றியுள்ள நிலையில் வல்வையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈ.பி.டி.பி ஆதரவு வழங்கக்கூடும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: March 03, 2018 at 19:25
தமிழ் தேசிய கூட்டமைப்பும் சுயேட்சை குழுவும் இணைந்து செயல்படுவதே ஊருக்கும் மக்களுக்கும் நன்மை .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.