நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 22.10.2021 காலை எங்கட புத்தகங்கள் கண்காட்சியும் விற்பனையும் யாழ் பொது நூலகத்தில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வை யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் ஆரம்பித்து வைத்தார்.
இக் கண்காட்சியில் 300 ற்கு மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர்களின் 500 ற்கு மேற்பட்ட பல்வேறு புத்தகங்களும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
இக் கண்காட்சி இன்று ஞாயிறு மாலை 5.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
சுகாதார விதிமுறைகளை பேணி இடம்பெறும் இக்கண்காட்சியில் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு 24.01.2020 அன்று இடம்பெற்ற யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சியில் முதன்முறையாக ‘எங்கட புத்தகங்கள்’ எனும் தலைப்பில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் அணிவகுக்கும் சிறப்புப் புத்தக கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.