யாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரப்பினால் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுனாமிம் அனர்த்தங்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் பெற்றுக்கொள்ளலாம் என அனார்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் அண்மைய நாட்களாக சுனாமி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்ப்பட்டுள்ளதுடன், இடம்பெயர்கின்ற சூழ்நிலைகளும் ஏறப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். பொதுமக்கள் மத்தியில் ஏதாவது இயற்கை அனர்த்தம் தொடர்பான தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக அவசர தொலைபேசி இலக்கமான 117 என்ற இலக்கத்திற்கும் அழைப்பை ஏற்படுத்தி, உங்கள் பிரதேசங்களில் இயற்கை அனர்த்த பாதிப்புக்கள் ஏதாவது உள்ளனவா? அல்லது அனார்த்த முன்னேச்சரிச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா? என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என மேலும் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.