கொழும்புதாண்டி சென்ற தாழமுக்கம், அராபியக் கடலில் புயலாக மாறுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2017 (வியாழக்கிழமை)
நேற்று இரவு கொழும்புக்கு மேலாகச் சென்ற புயல் மேற்கு வட மேற்குத் திசையில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த அதி தீவிர தாழமுக்கம் இன்று காலை 0230 இந்திய இலங்கை நேரப்படி அகலாங்கு 6.5 வடக்கு, நெட்டாங்கு 78.6 கிழக்கு என்னும் பகுதியில், கன்யாகுமரிக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் சுமார் 160 கடல் மைல்கள் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
குறித்த தீவீர தாழமுக்கம் தொடர்ந்து கிழக்கு - வட கிழக்குத் திசையில் நகர்ந்து அடுத்த 12 மணித்தியாலத்துக்குள் புயலாக (Cyclone) மாறவுள்ளது.
வங்காள விரிகுடாவில் இந்த வருடம் ஏற்பட்டுள்ள மூன்றாவது புயல் இதுவாகும். ஆனாலும்இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இதேவேளை தலைநகர் கொழும்பு உட்பட பல இடங்களில் தற்பொழுதும் பலத்த காற்று அவ்வப்போது வீசி வருகின்றது. இதனால் பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக சில இடங்களில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், விளம்பரப் பலகைகள் மற்றும் கூரைகள் என்பனவும் சேதமடைந்துள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.