மட்டக்களப்பில் இடம்பெற்ற செவிப்புலன் அற்றோர் உதைபந்து - தொடரின் சிறந்த வீரராக வல்வை வீரர் கர்ணன்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2017 (புதன்கிழமை)
வட கிழக்கின் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி செவிப்புலன் அற்றோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த வாரம் மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்தச் சுற்றுப் போட்ட்டியில் யாழ் மாவட்டம், மன்னார் மாவட்டம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கு பற்றின.
இந்தச் சுற்றுப் போட்டியில் பிரதிநிதித்துவபடுத்தி வல்வை வீரன் சுப்ரமணியம் கர்னண் (Supiramaniyam Karnan) பங்கேற்றிருந்தார்.
சுற்றுப் போட்டியில் யாழ் அணி வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது. யாழ் அணி மொத்தம் 9 கோல்களைப் பெற்றது. இதில் 8 கோள்களை வல்வை வீரர் செல்வன் கர்னண் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாகவும், இறுதிப் போட்டியின் சிறந்த வீரராகவும் செல்வன் கர்னண் தெரிவு செய்யப்பட்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.
சுப்ரமணியம் கர்னண் யாழ் கைதடியில் அமைந்துள்ள செவிப்புலன் அற்றோருக்கான பாடசாலையில் (J/kaithady nuffield school) இல் கல்வி கற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.