யாழ்ப்பாணத்தில் 245 மி.மீ. மழை – வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2020 (வியாழக்கிழமை)
புரெவி சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கிட்டத்தட்ட 245 மி.மீ. மழை பதிவாகியுள்ளது மற்றும் வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் 200 மி.மீக்கு மேல் பலத்த மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை விஞ்ஞான திணைக்களத்தின் அதிகாரி சிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சூறாவளி மேற்கு – வடக்கு-மேற்கு நோக்கி நகரும் என்றும், பகல் நேரத்தில் மன்னார் வளைகுடாவிற்குச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, புயலின் தாக்கம் பகலில் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.