வங்காள விரிகுடா கடற்பரப்பில் காணப்பட்ட ஆழமான தாழமுக்கம் ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.8N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.3 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒருபலத்த சூறாவளியாக விருத்தியடைவதுடன் அதற்கு அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு மிகப்பலத்த சூறாவளியாக விருத்தியடைந்து வடக்கு - வடமேற்கு திசையில் பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இது அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக மேலும் விருத்தியடைந்துமேற்கு - வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வட அகலாங்கு 13N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85E - 91E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.