கொழும்புத்தமிழ்ச் சங்க பட்டமளிப்பு விழா நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)
கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி (2015 / 2016) பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ் நிதி விருது வழங்கல் நாளை 12 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 0 4 3 0 மணிக்கு இடம்பெறவுள்ளது. பேராசிரியர் சபா ஜெயராஜா (தலைவர் புலமைக் குழு - கொழும்புத் தமிழ்ச் சங்கம்) அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் M.S.மூக்கையா அவர்கள் கலந்து சிற்பிக்கவுள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் பட்டயக் கற்கை நெறியில் சித்தி பெற்ற 18 பேர்களுக்கு பட்டமளிக்கப்படவுள்ளதுடன், பல்துறை வித்தகர் வித்துவான் ஆ.சபாரத்தினம் அவர்கள் 'தமிழ் நிதி' என்னும் வழங்கப்படவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.