எகிப்து நாட்டின் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள 2 ஆவது சுயஸ் கால்வாயில் முதாலவது கப்பல் ஒத்திகை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த புதிய கால்வாய் ஆனது ஏற்கனவே உள்ள சுயஸ் கால்வாயின் ஒரு பகுதிக்கு சமாந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் பிரகாரம் 44 கடல் மைல்கள் அளவுடைய கால்வாயில் பாரிய கப்பல்களினால் இரு வழிப் போக்குவரத்து செய்யமுடியும்.
படத்தில் சிங்கப்பூரின் APL நிறுவனத்திற்கு சொந்தமான கொள்கலன் கப்பல் ஒத்திகை பயணத்தில்
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஒத்திகையில் சில கொள்கலன் கப்பல்கள் (container ships) ஈடுபட்டிருந்தன. கப்பல்கள் கால்வாயைக் கடந்து கொண்டிருந்த பொழுது ஹெலிகொப்ரர்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் பாதுக்காப்பை வழங்கியிருந்தன.
ஏற்கனவே உள்ள சுயஸ் கால்வாய் 150 வருடங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டதாகும். இதனூடாக தற்பொழுது கப்பல்களால் ஒரு வழி பயணத்தையே மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது.
மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாயந்துள்ள பகுதியில் அமைந்துள்ள சுயஸ் கால்வாய் ஆசியாவையும் ஐரோப்பாவையும் செங்கடல் மற்றும் மெடிற்ற ரேனியன் கடல் பகுதி வழியாக இணைப்பதுடன் உலகின் 7 வீதமான கடல் வர்த்தகத்தை தன்னகத்தே கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.