சூயஸ் கால்வாயில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி தரை தட்டியிருந்த அதி பாரிய கொள்கலன்கலன் கப்பல் வகையைச் சேர்ந்த (Ultra Large Container Vessel) 'Ever Given' என்னும் கப்பல் தொடர்ந்தும் சுயஸ் கால்வாய் அதிகாரசபையினரால் (Suez canal authority) தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் தரை தட்டி 6 நாட்களின் பின்னர் கடும் முயற்சியின் பின்னர் மீட்கப்பட்டது. .
ஆசியா - ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடு.களுக்கு இடையிலான கப்பல் போக்கு வரத்து இதனால் தடைப்பட்டிருந்ததால் உலகின் கவனத்தை இந்த விடயம் பெரிதும் ஈர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கப்பல் உரிமையாளரிடம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தண்டப் பணமாக கேட்ட சுயஸ் கால்வாய் அதிகாரசபையினர், கடந்த வாரம் தண்டப் பணத்தை 700 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைத்து இருந்தனர்.
இத்தொகையும் அதிகம் என கூறி வருவதால் கப்பல் தொடர்ந்தும், அனைத்து கொள்கலன்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.