பிரசித்திபெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான நாளை இரவு நிகழவுள்ள மாபெரும் இந்திரவிழாவையொட்டி யாழின் வல்வெட்டித்துறை நகர் விழாக் கோலம் பூண்டுவருகின்றது.
பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள வல்வெட்டிதுறையின் ஊரணி முதல் ஊரிக்காடு வரையான, ரேவடி மற்றும் உதயசூரியன் கடற்கரை வீதி உள்ளடங்களான பகுதிகள் அலங்கரிக்கப்பட்டுவருகின்றன.
பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள. நாளை மாலை சுமார் 7 மணியளவில் ஆரம்பமாகும் நிகழ்ச்சிகள் அதிகாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கீழே படங்களில் இந்திரவிழாவிற்காக தயாராகும் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (Canada)
Posted Date: May 04, 2015 at 14:30
வல்வெட்டித்துறை.org குடும்பத்தினருக்கு நன்றி!
பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது வாழ்த்துக்கள் .மரங்களை முழுவதுமாக தரித்து சோடனை செய்வதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் மரங்கள்தான் மனிதனை வாழவைக்கும் உயிர்கள்.
நன்றி
அன்புடன்
தமிழ்நிலவன்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.