யேசு பாலகனின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கர்களும் யேசு பாலகனின் பிறப்பைக் கொண்டாடும் நத்தார் தினம் இன்றாகும்.
2017 வருடங்களுக்கு முன்னர் பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசுபாலகன் மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததை இன்றைய தினம் மக்கள் நினைவு கூருகின்றனர். இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் நத்தார் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
நத்தார் பண்டிகையையொட்டி வல்வை சந்தியில் அமைந்துள்ள சென் செபஸ்தியார் தேவாலயத்தில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பைச் சித்தரிக்கும் வண்ணம் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததுடன் நள்ளிரவின் பின்னர் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.
கீழே படங்களில் வல்வை ஊரிக்காட்டின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள நத்தார் அலங்காரங்களைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.