லண்டன் மிச்சத்தில் 4 வயது குழந்தை மரணம், உயிருக்கு போராடும் தாய்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2020 (புதன்கிழமை)
லண்டனின் மிச்சம் பகுதியில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். தாயார் காயங்களுடன் போராடி வருகின்றார். இவர்கள் இலங்கை வடக்கை பூர்வீகமாகக் கொண்டவர்கள் எனக் கூறப்படுகின்றது.
இறப்புக்காக காரணம் அல்லது இது சம்பந்தமாக எவரும் இதுவரை சந்தேகிக்கப் படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு அவர்கள் விரைந்த போது தாயும் மகளும் இரத்த காயங்களுடன் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவில் தெற்கு லண்டனின் தமிழர்கள் அதிகம் வாழும் Mitcham பகுதியில் உள்ள Monarch Parade என்னும் இடத்தில் குறித்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சில வருடங்கள் முன்பும் இதே பகுதியில் தாய் ஒருவர் இரு குழந்தைகளுடன் தானும் இறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.