வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்துக்குக் கொண்டு செல்லுமாறு வட மாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 03.06.2018 திகதியிடப்பட்டு யாழ் பிராந்திய இராணுவ பொறுப்பதிகாரி மேயர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சிக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில், குறித்த முகாம் ஏன் தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்பதற்கான காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை தற்போதைய இடத்திலிருந்து மாற்றுவதற்கான கோரிக்கை ஒன்று வல்வெட்டித்துறை நகரசபையால் ஜனாதிபதியிடம் அண்மையில் விடுக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. .
குறித்த இராணுவ முகாமுக்கு அருகில் மிகவும் அடர்த்தியாக விளங்கிவரும் ஆதிகோவில் குடியிருப்புக்களை வசதிப்படுத்தும் வகையில் தேவைப்படும் நிலம் கருதியே குறித்த கோரிக்கை விடப்பட்டிருந்தது.
குறித்த வேண்டுகோளின் நகல் எதிர்கட்சித்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் அனுப்பப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே முதலமைச்சர் மேற்குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.