எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு பொது ஜன பெரமுனவின் கட்சியும் தனித்துப் போட்டியிட நியமனப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. ஆனாலும் தற்பொழுது அக்கட்சி நியமனப் பத்திரம் யாழ் தேர்தல் அலுவலகத்தினால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக நியமன பத்திரப் படிவத்தில் அதாவது இரண்டாவது நியமனப் பத்திரத்தில் (Additional nomination paper or Second Nomination paper) 9 வேட்பாளர்களுக்குப் பதிலாக 7 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலும், முதலாவது மற்றும் இரண்டாவது விண்ணப்ப பத்திரங்களில் ஒரே வேட்பாளரின் பெயர் இடம்பெற்றிருந்ததுமே குறித்த பத்திரம் ரத்துசெய்யப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கொடுக்கப்பட்டிருந்த வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு
1 தொண்டைமானாறு வட்டாரம் – சோதீஸ்வரன் கமலாதேவி
2 ஆதிகோவில் வட்டாரம் – பொன்னுத்துரை தெய்வேந்திரன்
3 ரேவடி வட்டாரம் – சகஸ்ரநாமம் கம்சன்
4 பொலிகண்டி வட்டாரம் – கந்தசாமி வசீகரன்
5 வல்வெட்டித்துறை வட்டாரம் – முருகேசு மோகனதாஸ்
6 சிவன் கோயில் வட்டாரம் – மகாலிங்கம் ஸ்ரீ ரூபன்
7 வல்வெட்டி வடக்கு வட்டாரம் – செல்வன் தேவச் சந்திரன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.