வல்வையில் இயங்கும் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2017 (வெள்ளிக்கிழமை)
இந்தியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் 'பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம்' (Brahma Kumaris Raja Yoga Centre) என்னும் ஆன்மிகம் சார் அமைப்பின் கிளை ஒன்று வல்வெட்டித்துறையிலும் கடந்த 14 வருடங்களாக இயங்கிவருகின்றது.
2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வல்வை நெடியகாடு மானாங்கானை வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த நிலையத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சில வருடங்களில், நெடியகாடு தெணி ஒழுங்கையிலும் அதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு வரை நெடியகாடு பிள்ளையார் கோயில் தெற்கு வீதியை அண்மித்தும் இயங்கிவந்தது.
தற்பொழுது (கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆ திகதியிலிருந்து) வல்வெட்டித்துறை - பருத்தித்துறை பிரதான வீதியில், பழைய வல்வை கல்வி மன்றத்திற்கு முன்னால் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த நிலையம் இயங்கிவருகின்றது.
இந்த நிலையத்தில், நிலையத்தைச் சேர்ந்த சிலர் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர். இங்கு தியானப் பயிற்சிகளுடன், சில விசேட நிகழ்வுகளும் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றது.
பிரம்ம குமாரிகள் இராஜஜோக நிலையம்
பிரம்ம குமாரிகள் இராஜஜோக நிலையம் 1937 களில் இந்தியாவில் தொடக்கப்பட்ட ஆன்மீக இயக்கமாகும் இது தாதா லேக்ராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
பிரம்ம குமாரிகள் அமைப்பு ஆரம்பகாலத்தில் "ஓம் மண்டாலி" என்ற பெயருடன் இந்தியாவின், அன்றைய வடமேற்கு மாகாணமாக இருந்த சிந்துவில் உள்ள ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இது இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள அபு மலையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.