எதிர்வரும் 26, 27ஆம் திகதிகளில் ஜீவநதி பதிப்பகம், நெல்லியடி மத்திய கல்லூரியில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையும் இடம் பெறவுள்ளது.
ஈழத்து பதிப்பிலக்கிய உலகில் காத்திரமான செயற்பாடுகள் மூலமாக பெரிதும் அறியப்பட்ட, பரணீ என அழைக்கப்படும் கலாமணி பரணீதரன், ஜீவநதி பதிப்பகத்தினூடாக இதுவரை 220 புத்தகங்கள் வரையில் வெளியிட்டுள்ளார்.
ஜீவநதி சஞ்சிகையின் 166 இதழ்கள் இதுவரையில் வெளிவந்துள்ளன, அவற்றில் பல இலக்கியகருத்தாக்களின் சிறப்பிதழ்களாகவும், பெருந்தொகுப்புக்களாகவும் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவை தவிர,
'கடல்', கல்வியியல் - உளவியல் - சமூகவியல் ஏடு,
'நடி', மாணவர்களுக்கான அரங்க ஏடு,
என்பவற்றையும் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகிறார்.
இவற்றோடு தமது ஊரான அல்வாய் மனோகராக் கிராமத்தினை பற்றிய தகவல்கள் செய்திகள் என்பவற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் 'நாங்கள்' என்னும் பெயரில் மாதாந்த பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டுவருகிறார்.
ஜீவநதி வெளியீடுகள் மட்டுமல்லாமல் பல்வேறு வெளியீட்டகங்களின் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் இம்முறை காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட உள்ளன.
8 பதிப்பகங்களின் 500 க்கும் அதிகமான ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
அதோடு ஈழத்து சஞ்சிகைகள் பலவும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் 8 புதிய நூல்கள் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் கண்காட்சியரங்கில் வெளியிட்டுவைக்கப்பட உள்ளன.
அனைத்து புத்தகங்களுக்கும் 20% விலைக்கழிவு வழங்கப்பட உள்ளது. .
வடமராட்சியை மையப்படுத்தி இந்தப் புத்தக கண்காட்சி இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.