காலாகாலமாக வல்வையில் இடம்பெற்று வந்த மரபு ஒன்று இந்த வருடம் இடம்பெறவில்லை.
மார்கழி மாதம் வீடுகளில் பிள்ளையார் பிடித்து விநாயகர் வழிபாட்டில் மக்கள் ஈடுபடுவதும் பிடிக்கபட்ட பிள்ளையார் திருவுருவங்களை சேர்த்து வைத்து அவற்றை வீடுகளிலிருந்து பொம்மலாட்ட விழா எடுத்து புனித தீர்த்த சமுத்திரத்தில் கரைப்பது வழமையான ஒன்றாகும்..
இந்த நிகழ்வு வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தொண்டர்களால் பொம்மலாட்ட நிகழ்வுடன் பல ஆண்டுகளாக தைப்பொங்கல் தினத்தன்று மேற்கொள்ளப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த நிகழ்வானது. வழமையாக ஆதிவைரவர் ஆலயத்தில் இருந்து மாலை சுமார் 0730 மணியளவில் ஆரம்பித்து, வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதி வழியாக விநாயகர் திருவுருவங்கள் சேகரிக்கப்பட்டு, இரவு சுமார் 10 மணியளவில் ஊறணி தீர்த்த கடற்கரையை வந்தடைந்து சேகரிக்கப்பட்ட விநாயகர் திருவுருவங்கள் ஊரணி கடலில் கரைக்கப்படுவது வழமையாகும்.
.
ஆனாலும் இந்த நிகழ்வு இந்த வருடம் இடம்பெறவில்லை என்பது..
தைப்பொங்கல் தினத்தன்று உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற பட்டப் போட்டி மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏதுவாக வல்வை நகரசபையால் ஆலடி தொடக்கம் சந்தி வரையான பிரதான வீதி போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
.கீழே படங்களில் கடந்த வருடம் வல்வெட்டித்துறையில் பொம்மலாட்டமும் பிள்ளையார் எடுத்தலும் போது இடம்பெற்ற சில நிகழ்வுகளின் காட்சிகளைக் காணலாம்.
வல்வை - பருத்தித்துறை பிரதான வீதியில் பொம்மலாட்டம்
விநாயகர் திருவுருவங்களை சேகரிக்கும் வண்டி
விநாயகர் திருவுருவங்களை வண்டியில் போடும் பொதுமக்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.