மிக நீண்ட காலத்தின் பின்னர் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமானது.
வல்வை விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையேலேயே 5 நபர் கொண்டு இடம்பெறும் இந்தப்போட்டியில் அனுமதிக்கப்பட்ட கழங்கங்கள் 4 குழுக்காளாக பிரிக்கப்பட்டு, இரண்டாவது குழுக்களுக்கான போட்டி நேற்று இடம்பெற்றது.
இதுவரை 8 அணிகள் காலி இறுதி ஆட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் செவ்வாய்க் கிழமை காலிறுதி ஆட்டங்கள் இடம்பெறவுள்ளது.
போட்டியில் முதல் இடத்தைப் பெறும் கழகத்திற்கு 15,000/- ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெறும் கழகத்திற்கு 10,000/- ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
குறித்த போட்டி அமரர்கள் பரஞ்சோதி மற்றும் சந்திர மோகன் ஞாபகார்த்தமாக நடாத்தப்படுகின்றது.
கீழே படங்களில் நேற்று இடம்பெற்ற ஆட்டங்களின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.