நீண்ட காலத்தின் பின் வல்வையில் கடற்கரை உதைபந்து போட்டி, நாளையும் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)
மிக நீண்ட காலத்தின் பின்னர் கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி இன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது.
வல்வை விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையே 5 நபர் கொண்டு இடம்பெறும் இந்தப்போட்டியில் அனுமதிக்கப்பட்ட கழங்கங்கள் 2 குழுக்காளாக பிரிக்கப்பட்டு முதல் குழுவிற்கான போட்டியே இன்று மாலை இடம்பெற்றது.
நாளை குழு 2 ற்கான போட்டிகள் இடம்பெறவுள்ளது.
போட்டியில் முதல் இடத்தைப் பெறும் கழகத்திற்கு 15,000/- ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெறும் கழகத்திற்கு 10,000/- ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
இன்று இரவு 8 மணிவரை இடம்பெற்ற போட்டியை காண வெளிநாட்டவர்களும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டி அமரர்கள் பரஞ்சோதி மற்றும் சந்திர மோகன் ஞாபகார்த்தமாக நடாத்தப்படுகின்றது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.