‘சிறுவர்மலர்’ காலத்திலிருந்து ஊடகத்துறையில் ஒன்றாகவே பயணித்தோம். இளமையில் நடராஜசிவத்தையும் தன்பிள்ளைகளுள் ஒருவனாகவே வரித்து எனது அன்னை பாசம் பாராட்டுவார்.
ஒன்றாகவே உணவருந்துவோம். வெற்றிலை போடும் பழக்கம் இளவயதிலேயே நடராஜசிவத்துக்கு உண்டு என்பதால் எனது அன்னை அன்போடு உரலில் இடித்துத் தரும் வெற்றிலையை ஆசை ஆசையாயச் சுவைத்து உண்டபின், எனது அன்னையின் சேலையைப் போர்த்திக்கொண்டு இருவருமே ஒன்றாக உறங்குவோம்.
‘இளைஞர் மன்றம்’ நிகழ்ச்சியிலும் ஒன்றாகவே கலந்து கொள்வோம், சன்மானம் பெறும் வானொலிக் கலைஞர்களாக இருவரும் ஒன்றாகவே தெரிவானோம். அறிவிப்பாளர் தேர்வுக்கும் ஒன்றாகவே சென்று தெரிவானோம். வாரந்தோறும், நமக்குக் கிடைத்த ஊதியத்தையெல்லாம் போட்டிபோட்டுச் செலவழித்து கொழும்பின் பிரபல உணவங்களையெல்லாம் தேடிச்சென்று விதவிதமான உணவுவகைகளை உண்டு மகிழ்வோம். காலம் நம் இருவரையும் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் சென்றது.
இந்து கலாசார அமைச்சு நம் இருவருக்குமே ‘கலையரசு’ எனும் ‘வாழ்நாள் சாதனை விருது’ வழங்கியபோதுதான் கடைசியாக சந்தித்தோம்.
6 தசாப்தங்களின் பின் இன்று நிரந்தரமாகவே அவன் பிரிந்த சோகச்செய்தி சற்றுமுன்னர் பேரிடியாய் வந்து சேர்ந்தது.
நண்பனே... நண்பனே... எனது உயிர் நண்பனே! என்னிலும் இரண்டாண்டுகள் மூத்தவன் என்பதால் என்னை முந்திச் சென்றாயோ.......
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.