Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (52) – சுழியோடி வைரவன்

பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2019 (ஞாயிற்றுக்கிழமை)
எங்களை நாங்களே சமூகத்தில் மாறுபடுத்தி, உயர்வுபடுத்தி அல்லது அடையாளப்படுத்துவதற்காக, எங்கள் பெயர்களுக்கு முன்னால்  ‘ஏதோ’ ஒன்றை இட்டுவரும் இக்காலங்களில் – இயல்பாகவே தனது பெயருக்கு முன்னால் ‘சுழியோடி’ என்னும் – தனது திறமையைப் பறைசாற்றிய பெயரைப் பெற்றவர் தான் ‘வைரவன்’ – ‘சுழியோடி வைரவன்’ எனப் பரவலாக அழைக்கப்பட்டவர்.
 
சூசை அவர்கள் எழுதியிருந்த கட்டுரை ஒன்றில் ‘வைரப்பா’ என ‘சுழியோடி  வைரவன்’ பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
 
அந்தக் காலங்களில் ஊரிலும் சரி இயக்கத்திலும் சரி ஏதாவது துறை ஒன்றில் புலமை பெற்றவர்கள் அல்லது பிரபல்யங்கள் பொதுவாக ‘அப்பா’ போட்டுத்தான் அழைக்கப்பட்டார்கள் அல்லது பேசப்பட்டார்கள். அம்பப்பா, குண்டப்பா, கிளியப்பா, அதிரப்பா, தங்கப்பா............ என அப்பா வரிசையில் ‘வைரப்பா’ என சுழியோடி வைரவனும்.
 
'சுழியோடி வைரவன்' மற்றும் 'வைரப்பா' என இரண்டு சிறப்புக்கள் கொடுக்கப்பட்டு ஊரில் அழைக்கப்பட்ட ஓரிருவர்களில் வைரவனும் ஒருவர். 
 
எங்கள் அம்மன் கோவிலடி வீட்டடியில் உள்ள மணற்கிணற்றில் அதிகாலை வேளைகளில் குளித்து, கோவில் வாசலுக்கு சென்று வணங்கி நெற்றி நிறைய விபூதியிட்டு, கழுவேறியில் இருந்து குங்குமமும் வைத்து ‘வைரப்பா’ செல்வதை எனது சிறு பாராயத்தில் பல தடவைகள் பார்த்திருக்கின்றேன். எனது நினைவு தெரிந்த நாளில் வைரவன் ஒரு ‘சுழியோடி’.
 
குடிப்பழக்கம் உடையவர், வெள்ளிக்கிழமைகள் தவிர. ஆனாலும் யாருடனும் சண்டையிட்டதை நான் பார்த்ததில்லை. சிறுவர்களுடன் கூட சிரித்துத்தான் பேசுவார். காலையில் குளித்துவிட்டுச் செல்லும் போதும் வெள்ளிக்கிழமைகளிலும், எமது வீடு தாண்டிப்போகும் போது, அம்மா ஐயாவைக் கண்டால் தலையாட்டிவிட்டுப்போவார். குடித்திருந்தால் தலையை நிமிர்த்திப் பார்க்கமாட்டார்.  பண்பான ஒரு மனிதர்.                    
சுழியோடி  வைரவன்
கடலுடன் அதிக நேர வாழ்க்கை என்றதால் அதற்கே உரிய கரிய தேகம், சீவிய முடி, சற்று வளைந்த முதுகு, சிறிய தொப்பை. மேலங்கி அணிவது குறைவு. சாரமும் தோள் படையில் ஒரு துண்டும் அணிவதே வழமை. அடிக்கடி காதைக் குடையும் பழக்கம் கொண்டவர். (இதற்கு மிக ஆழங்களில் சுழியோடுவது ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்). பழைய தத்துவப் பாடல்களை பாடுவார். எனது தந்தையின் வயதை ஒத்தவர்.

இயற்பெயர் சின்னத்தம்பி குமரகுரு. பிறந்து வளர்ந்த இடம் ஆதிகோவில், வல்வெட்டித்துறை.

நான்கு நாட்கள் முன்பு ஊரில் இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் கடலில் மூழ்கியிருக்கலாம் எனச் சந்தேகித்து, ஊரணி கடற்கரையில் சுமார் 6 அடி ஆழத் தண்ணீரில் சுழியோடிகள் சுழியோடும் உபகரணங்கள் சகிதம் தேடலில் ஈடுப்பட்டார்கள்.  சுழியோடும் உபகரணங்கள் அணிவது என்பது பொதுவானதும் மற்றும் அங்கீகரிக்கபட்ட நடைமுறையும் ஆகும்.

ஆனால் ‘சுழியோடி வைரவன்’ எந்த ஒரு உபகரணங்களையும் அணியவில்லை. ஆரம்ப காலங்களில் கடலில் அமிழும் மீன் பிடி உபகரணங்கள், படகுகள் மற்றும் கடலில் காணாமல் போகும் மீனவர்கள், சுழியில் அகப்படும் பொது மக்களை தேடுதல், கிணறுகளில் விழுந்தவர்களை மீட்டல் என வைரவன் ஈடுபட்டு வந்தாலும், இயக்கத்தின் தோற்றத்தின் பின்னர் இயக்கத்தின் சுழியோடியாகவே பிரதானமாக செயற்பட்டு வந்தார் என்பது பொதுவாக ஊரவர்கள் அறிந்த விடயம்.

அம்மன் கோவில் பின் வீதியில் இயக்கத்தின் வாகனம் காத்திருந்து அழைத்துச் செல்லும் அளவுக்கு வைரவனின் தேவை இயக்கத்துக்கு இருந்திருந்தது.

2009 ற்குப் பின்னர் இயக்கத்தின் எச்சங்கள் அனைத்தையும் படைகள் அகற்றியிருந்த போதிலும், ஒன்றிரண்டை இன்றும் ஆவணப்படுத்தி மக்கள் பார்வைக்கு விட்டுள்ளார்கள். அவற்றில் ஒன்று முல்லைத்தீவில் கடற்புலிகளின் கட்டுமானங்கள் சில. தாம் ஒரு மாறுபட்ட ஒரு எதிரியுடனே போரிட்டுள்ளோம் என்பதை பறை சாற்றுவதாக அது உள்ளது அங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ள கடற்புலிகளின் குறித்த அந்தக் கட்டுமானங்கள்.

கடற்புலிகளின் செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டிருக்கின்றது. இவ்வாறான கடற் புலிகளிலேயே பல இளம் சுழியோடிகள் இருந்ததாகக் கூறுகின்றார்கள். அவ்வாறு இருந்த போதிலும் வைரவன் தேவை இயக்கத்துக்கு தேவையாக இருந்தது – இது பைரவனின் அசாத்திய திறமையன்றி வேறொன்றுமில்லை..

பாக்கு நீரிணையின் அடி வரை வைரவன் சுழியோடி இருந்தார். பாக்கு நீரிணையில் கடலின் ஆழம் சில இடங்களில் சுமார் 40 அடி வரை கூட உள்ளது.

பாக்கு நீரிணையின் ஆழங்களையும் கடலின் அடிப்பகுதியின் (Sea bed) தன்மைகளையும், நீர் ஓட்டங்களின் தன்மைகளையும் அதிகம் தெரிந்திருந்த ஒரு நபர் என்றால் அது வைரவனாகத் தான் இருக்கும் என நினைக்கின்றேன்.

திரு.சூசை அவர்கள் எழுதியிருந்த கட்டுரை ஒன்றில் வைரவனை பற்றி குறிப்பிட்டிருந்தார். ‘கடலில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு, குறித்த அந்த மோதல் சம்பவத்தின் பின்னர் வைரப்பாவை சுழியோடி சோதனையிடக் கூறியிருந்தோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். (குறித்த கட்டுரையை வலைத்தளம் ஒன்றில் தான் சில வருடங்கள் முன்பு படித்தேன், என்ன சம்பவம் என்பது பற்றி சரியாக ஞாபகம் இல்லை).

வைரவனைப் பற்றி எழுத்தில் பதியப்பட்ட ஒரே ஒரு ஆவணமாக அவ்வொன்றைத் தான் நான் பார்த்துள்ளேன் - வல்வை எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்களால் தவறவிடப்பட்டவர் வைரவன்.

நேற்று பைரவன் பற்றி ஆதிகோவிலடியைச் சேர்ந்த எனது வகுப்புத் தோழன் ஒருவனுடன் கதைத்த பொழுது ‘சூசை இருந்திருந்தால் ஆனந்தன் போல் வைரவனும் நினைவு கூரப்பட்டிருப்பார்’ என தனது ஆதங்கத்தை தெரிவித்தான்.

       அசாத்திய திறமையின் பின் வைரவன் 

வைரப்பாவின் ‘ஏதாவது குறிப்பிடக் கூடிய திறமைகள் சிலவற்றை கூறுங்கள்’ என அவரின் பாரியாரிடம் கேட்டேன். ‘எவ்வளவுவற்றை கூறுவது தம்பி’ என்ற அவர் சிலவற்றைக் கூறினார். கிணற்றுக்குள் விழுந்ததுகளை எல்லாம் ஐயாதான் எடுத்தார், ‘அவைகளுக்கு’ ஏராளமாக செய்தார் என்றார்.

ஏராளமாக செய்தவர் மறக்கப்பட்டு விட்டார் என்ற வலி அவரின் மனதில் உள்ளதை தெளிவாக உணர முடிகின்றது.

வைரப்பாவின் தந்தையும் ஒரு சுழியோடிதானாம் என்று மேலும் கூறினார் அவர் பாரியார்.

சுழியோடி வைரவன் பற்றி அவர் பாரியார் கூறியவற்றில் குறிப்பிடக் கூடிய ஒன்றைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.

90 களில் பருத்தித்துறை துறைமுகத்தில் சரக்கு இறக்குவதற்காக நங்கூரமிடப் பட்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றின் நங்கூரம் ஏதோவொரு பொருளுடன் (Obstruction) அகப்பட்டுக் கொண்டுவிட்டது. அப்பொழுது சரக்கு ஏற்றி இறக்கும் பணியைக் கண்காணித்தவர்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர். பல சுழியோடிகள் முயன்றும் தீர்க்க முடியாத பணியை வெறும் ஆளாக சுழியோடிச் சென்று   சாதித்தாராம் வைரவன். இந்த அசாத்தியத் திறமையைப் புகழ்ந்த வெள்ளைக் காரர்கள், கடலில் இருந்து மேலே வரும் பொழுது வைரவனைப் புகைப் படம் எடுத்து உடனடியாகவே படத்தை கழுவி அவரிடம் கொடுத்தார்களாம். (மேலே காட்டப்பட்டுள்ளது தான் அந்த அரிய புகைப் படம்).  

பல ஆடி ஆழத்தின் உள்ளே பிராணவாயு கலங்கள் இன்றி, புலனுக்கும் ஏதும் உபகரணங்கள் இன்றி சில பல நிமிடங்கள் தரித்து நின்று ஒரு கடும் பணியை முன்னெடுப்பது என்பது சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை கற்பனைகளுக்கு அப்பாற்பட்டே ஒன்றே - வைரவன் ஒரு அசாதாரண மனிதரே.

கல்வி அறிவு , குடிப் பழக்கம், சுற்றுச் சூழல், தன்னகத்தே கொண்டிருந்த திறமையை தானே அறியாமை எனப் பல காரணங்கள் வைரப்பாவை பல சாதனைகளின் சொந்தக்காரன் எனக் காட்ட மறுத்து விட்டது.

வைரப்பா தனது பணியை எதிவித பாரபட்சமும் பாக்காமல் பொதுமக்கள், போராளிகள், படைகள் அரச அதிகாரிகள் என அனைவருக்கும் தான் அளித்திருந்தார்.

தந்தை போல் தனயன் என்பார்கள். பைரவனின் மகனும் ஒரு சுழியோடி. அத்துடன் சிறந்த ஒரு ஒட்டி. (வல்வையில் கடத்தல் தொழிலில் படகுகளைச் செலுத்தியவர்கள் ‘ஓட்டி’ என அழைக்கப்பட்டார்கள். பின்னாளில் கடற்புலிகளின் படகுகளைச் செலுத்தியவர்களும் இவ்வாறே அழைக்கப்பட்டார்கள். கடத்தல் – பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லல் எனவும் பொருள்படும்).

முன்னாட்களில் கடத்தல் தொழிலில் ஒட்டியாக இருந்த இவரின் மகன், பின்னாட்களில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தலைமையில் இயங்கிவந்த ரீ.என்.ஏ என்ற தமிழ் தேசிய இராணுவம் (Tamil National Army) என்னும் போராளிக் குழுவிற்கு ஒட்டியாக இருந்தார் என்று அப்பொழுது சிலர் கதைப்பதை கேள்விப் பட்டிருக்கின்றேன், ஆனாலும் உறுதிப்படுத்த முடியவில்லை.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     'வைரப்பா' வாக 

மகன் ஒட்டியாகச் சென்ற வேளையிலேயே மரணித்தார்.

வைரப்பாவின் பேரப் பிள்ளைகளில் இருவரும் சுழியோடிகளாக இருந்தவர்களாம். அவர்களும் கடலுடன் சங்கமித்து விட்டார்கள்.

வல்வையின் எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பல நபர்களைத் தவற விட்டுள்ளார்கள். இதை தவறு என்று கூற முடியாது. எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் குறைந்த பட்சம் ஒருவரால் கூட வைரவன் பற்றி ஆவணப் படுத்த முடியாதது பெரும் குறைதான்.

வைரவன் போல் ஓட்டு மொத்தமாக மறக்கப்பட்டவர்கள் வேறும் பலர் உள்ளனர். 

30/04/2005 இல் நோய்வாய்ப்பட்டு வைரவன் இறந்தார். இறுதி ஊர்வலம் சகல மரியாதைகளுடன் தான் செய்யப்பட்டது என வைரப்பாவின் மனைவி கூற, அவரின் கண்களில் இருந்து கண்ணீரும் வரத் தவறவில்லை. 

வல்வையின் பக்கங்களில் என்று குறிப்பிடப்படுவதை விட தமிழர்களின் பக்கங்களில் பதியப்படவேண்டியவர் - வைரப்பா என்னும் ‘சுழியோடி வைரவன்’ அவர்கள்.

கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன்

TP – 00 94 777 64 99 55 (Viber, Whats up)

Email - marinerathava@yahoo.com

Face book – athiroobasingam.athavan  


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Divanantha (Sri Lanka) Posted Date: April 27, 2020 at 11:22 
சுழியோடி பைரவன் ஒரு உன்னதமான மனிதர் தகவலுக்கு நன்றி

RAJKUMAR PERIYATHAMBY (canada) Posted Date: August 19, 2019 at 08:32 
உண்மை சிறப்பு. அவரது மகள் ஒருவர் மாவீரர் என நினைகின்றேன்?

Suyenthiran (swiss) Posted Date: August 19, 2019 at 03:57 
வைரவன் என் நினைவில் என்றும் வாழும் உன்னத மனிதன் - ஆதி கோவிலடி வாழ் மக்களை நன்கறிவேன் குறிப்பிட்ட சில ஆண்டு பகுதிகளில் எனக்கும் பல நட்புறவுகள் கிடைத்தன அதில் நீக்கமற நிறைந்திருப்பவர் சுழி ஓடி வைரவன் 1975ல் எனக்கு திருமணம் ஆனதில் இருந்து தொண்டமானாற்றில் வசித்து வந்தேன் ஆண்டு தோறும் தமிழர்களின் அனைத்து பண்டிகை திரு நாட்களெல்லாம் என்னிடம் வருவார் மச்சான் தங்கைச்சி என்றே எரிமையோடு எமை அழைக்கும் வஞ்சகம் சூதறிய மூத்த நண்பன் என்றே சொல்வேன் வைரவன் வந்திருக்கிறான் தங்கைச்சி மச்சானடம் சந்தோசத்திற்காக என உரிமையோடு மகிழ்வுறும் உன்னதன் சுழி ஓடி வைரவன்


இவர் வணங்கும் தெய்வம் ஆதிசக்தி வைரவர் ஆழியில் சுழி ஓடும் போதில் எல்லாம் தனக்கு துணை வைரவன் என்பார் வைரவனின் வாலாயமே உறு துணை என வைரவனிடம் தன்னை ஒப்படைத்துவிட்டுத்தான் சுழி ஓடிச்சென்று சகல காரியங்களையும் செய்கின்றேன் என்பார் வடமராட்சியில் கடல் அடியில் யாருக்கு உதவி வேண்டுமோ அது வைரவன் இல்லாமல் ஈடேறியதில்லை அவர் செய்த கடலடி மீட்பு இரு சம்கவங்களை நேரில் பார்த்தவன் நான்

தொண்டமனாற்றில் எனது தம்யின் மாமாவினுடைய இழுவை படகு அதிகளவு மீன்கள் ஏற்றிய பாரத்தில் ஆழிகடலில் மூழ்கி விட்டது அதீத பாரத்துடன் படகு மூழ்கியதால் அதை மீட்டெடுப்பது கடின நிலை என்று கைவிடும் போதில் தன்னால் முடியும் இரண்டு மூன்று இழுவை படகுகளுடன் தன்னை அந்த இடத்திற்கு கூட்டிச் செல்லுங்கள் படகில் இருக்கும் மீன்களை அகற்றிவிட்டு மூழ்கி இருக்கும் படகில் கயிறு கட்டித் தருகிறேன் என்று கூறினார் அதேபோல் அவரின் துணிகரச் செயலினால் ஆழியில் இருந்து அப்படகு மீட்டெடுக்கப்பட்டது

இரண்டாவது சம்பவம் தொண்டமனாற்றில் அப்போதிருந்த ஆமிக்காம்பில் இருந்து நற்பகல் வேளையில் மூன்று ஆமிக்காறர்கள் விசை படகில் சென்றவேளை ஒருவர் தவறி கடலுக்குள் வீழ்ந்து மூழ்கி இறந்துவிட்டார் அன்று பூராவும் இராணுவ சுழி ஓட்கள் தேடியும் கிடைக்கவில்லை மூழ்கி இறந்தவரின் உடல். மறு நாள் வைரவனை அழைத்துவந்து தேடினார்கள் நான்கு மணித்தியாலங்கள் தேடியும் கிடைக்கவில்லை அப்போது எனது சிறிய படகில் சென்று இராணுவ அதிகாரிகளுடன் சொன்னேன் அந்த இராணுவச் சிப்பாய் கடலுக்குள் வீழ்ந்தகோது கடற்கரையில் இருந்து பார்த்தேன் என்றும் வைரவனுக்கு குறிப்பாக அந்த இடத்தை காண்பிக்கிறேன் என்றேன் சம்மதம் தந்தார்கள் மச்சான் வைரவனிடம் விபரத்தை சொன்னேன் மச்சான் நீ இடம் விட்டு தேடிக் கொண்டிருக்கிறாய் உனக்கு இடம் காட்டுகிறேன் என்றேன் வைரவன் மிகுந்த சந்தோசம் கொண்டார் கடலுக்குள் வலைகளை விரித்து தாளவிட்டு மறுநாள் சென்று எடுக்கும் மையம் பார்க்கும் நுணுக்கத்தை என் சின்ன மாமா முருகேசிடமும் மச்சான் குட்டிக்கிளியிடமும் நன்கே கற்றுருந்தேன் அதன் படியே சிப்பாய் மூழ்கிய இடத்தை வைரவனுக்கு காண்பித்தேன் ஓர் இரு நிமிடங்களில் மீட்டுவந்தார் வைரவன் கடலில் மூழ்கியவரின் உடலை சுழி ஓடி வைரவனுக்கு நிகர் சுழி ஓடி வைரவன் அன்றி வேறு யாரும் இல்லை - மச்சான் வைரவா வாழ்க உன் புகழ்

ராஜ்குமார் (கனடா) (Canada) Posted Date: August 18, 2019 at 21:46 
'ஆழிமகன்' என்று அனைவராலும் அழைக்கப்படவேண்டிய இந்த மனிதனின் மறுக்கப்பட்ட அல்லது மறந்துவிட்ட மகத்துவத்தை ஆதவன் பக்கத்தில் மறவாமல் அமர்த்திய பாங்கு அருமையானது. நன்றி ஆதவன்


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
ஆதவன் பக்கம் (22 ) – 'பழனியப்பா' எனும் மகத்தான மனிதர்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2020 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (51) - அறுபடும் உறவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2019 (வெள்ளிக்கிழமை)
ஆதவன் பக்கம் 49 – ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் -எப்படி நீந்தப் போகின்றோம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2019 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (47) – முழுமையாகாத பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2018 (வியாழக்கிழமை)
ஆதவன் பக்கம் (46) – வடமராட்சிகிழக்கின் பூர்வீகச் சொத்துக்களை அழிக்கும் நாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (45) – கப்டன் ஒப் தி ஷிப்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (44) – ஆபத்தான வயர்களும் வாணவேடிக்கைகளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (43) – கவிழ்ந்த தேரும் நிமிர்த்திய திறமையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (42) - 'அப்பாடா' என கூறவைக்கும் செய்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (41) - ரமணனும் சகோதரிகளும் ஒரு உதாரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (40) - மாயமான வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (39) - தண்ணீர் தண்ணீர் தண்ணீர் - யாழின் நீர்த் தட்டுப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (38) - விவிரி ஜங்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (37) - சிறந்த உற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (36) - கழகங்கள் கலைக்கப்பட வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (35) - ஒரு குடும்பத்தின் வாழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (34) – அன்னதானத்துக்குப் பட்டபாடும், அன்னதானம் படும்பாடும்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (33) – இவர்கள்தான் கெளரவிக்கப்படவேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (32) - Hats off ஜெயா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (31) – வல்வையில் துறைமுகத்துக்கான சாத்தியங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (30) – யாழிலும் யூனிவேர்சல் பழங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (29) – ஊரில் பணப்புழக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (28) - அக்கௌன்டன்ட் குமாராசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (27) – உண்மைச் சம்பவம் - ஐயாவும், ஆஞ்சநேயர் சாமியாரும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (26) – கண்டன் ஆச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (25) – யாழ்ப்பாணத்தாரின் ஒழுங்கைகளும் சுவர்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (24) – கப்பல் வாங்கிய நம்மவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (23 ) – யாழ்ப்பாணக் குப்பைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (21) – சுமந்திரனுக்கு வல்வையில் மாலை, 'Shame' மா?
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (20) – கஸ்புஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (19) – மதுராவும் வல்வையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (18) – இந்திரவிழாவில் நான் கண்ட 17 குறைபாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (17) – பாணாக்கம், மோர், தயிர்ச்சோறு, சர்பத்..........
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (16) – ஒரு முதுசத்தின் மறைவு (காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (15) – கப்பல் மாப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (14 ) – வல்வை வரைபடத்தில் முதலாவதாக ரேவடிப் பூங்கா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (13) – நான் ஒரு மரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (12 ) – இங்கு ஆங்கிலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (11) – கொட்டப்பட்ட இ வேஸ்ற்றுக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (10) – இசை நிகழ்ச்சியால் வல்வையில் மழுங்கடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2018 (வெள்ளிக்கிழமை)
ஆதவன் பக்கம் (9 ) – பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (7) – வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (6) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள், 3 வருடங்கள் முன்பு நான் விரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (5 ) – மயிலிட்டி என்னும் சோகம், நேரடிப்பாதை வல்வைக்கு வளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (4 ) – நகரபிதாவிற்கு………………….பொது மக்கள் சார்பில் 101 கோரிக்கைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (3) - M.K.சிவாஜிலிங்கம் - நான் அறிந்த ஊரின் சேவகன் -
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (2) – அரிப்பும், அழிப்பும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (1) – ஐயா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2018 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA தை மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai