தமிழரசுக்கட்சியின் வெற்றிக்காம் மேடையில் பேச்சாளராக பணியாற்றியவர் - நகுலசிகாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2017 (வியாழக்கிழமை)
இவருடன் நான் இரவுப் பாடசாலையில் அறிமுகமானேன். இவருக்கு பல முகங்கள் உண்டு. 1965ம் ஆண்டு அன்று எமது பருத்தித்துறை தொகுதியில் பாராளு மன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரு.துரைரத்தினம் அவரின் வெற்றிக்காகவும் தமிழரசுக்கட்சியின் வெற்றிக்காகவும் மேடையில் பேச்சாளராக பணியாற்றியவர். பின்பு நான் வல்வை சனசமூகசேவா நிலையத்தின் நிர்வாகத்தில் பங்கெடுத்தபோது நெருங்கிப்பழகினோம்.
இவர் ஆரம்பத்தில் இலங்கைப் போக்குவரத்துச்சபை பருத்தித் துறை டிப்போவில் வேலை செய்தாலும், மிகுதி நேரத்தை ஆசிரியர், எழுத்தாளர், நாடகத்துறை கலைஞர், கழகங்களின் விளையாட்டுப் போட்டிகளில் அறிவிப்பாளர், கவிஞர், கட்டுரையாளர் இப்படியாக பல முகங்கள் உண்டு.
சிறு வயதில் சந்நிதி கோயில் மண்ணில் தாய் சகோதரன் தங்கவேலாயுதம் அவர்களுடன் வாழ்ந்து சந்நிதியானுக்கு பூ பறிக்கும் தொண்டனாகவும், கோயிலடி யில் ஓரு நூல் நிலையத்தையும் அமைத்தார். 1974 தமிழாராய்ச்சி மாநாட்டின்போது வல்வெட்டித்துறையின் கப்பல் மாதிரி ஊர்வலம் யாழ்நகர் சென்றபோது அதிலும் விமர்சனங்களைச் செய்தவர்.
நாம் ஆவணக்காப்பகத்தை ஆரம்பித்தபோதும், கனடாவிலிருந்து செல்லும் போது, எமது ஆவணக்காப்பகத்திற்கு வந்து எமக்கு உற்சாகம் ஊட்டுவார். எமது ஊருக்கென ஆறுமுகம் பாலன்......! இவன் ஆற்றங்கரை வேலன்........! என்ற நூலை தான் 70 வருடங்கள் பூ பறித்ததன் காரணமோ 70 பக்கங்களுக்கு மேல் அந்த நூலை எமக்கு அழித்துள்ளார். அந்த நூல் என்றும் எமது ஆவணக்காப்பகத்தில் நிலைத்து நிற்கும். இம்முறையும் மிகவும் கரிசனையோடு வழியனுப்பி வைக்கும்போது நாமும் மறுவருடம் சந்திப்போம் என்றுகூறி விடைபெற்றோம். அவரின் இழப்புபற்றி அவரால் ஆரம்பிக்கப்பட்ட Valvettithurai.org இணையத்தில் அறிந்து மிகுந்த கவலை அடைந் தோம். இவரின் பிரிவால் துயருறும் அவரது மனைவி, பிள்ளைகள், சகோதரம், குடும்பத்தினருடன் நாமும் பங்கெடுக்கின்றோம்.
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்
ந.நகுலசிகாமணி, உமா.ந (கனடா)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Jeyasegarampillai (U.U)
Posted Date: July 07, 2017 at 07:50
Master a good wrestler too
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.