சிதம்பராவில் பல்கலை புகும் மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2017 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் இருந்து பல்கலை கழகத்திற்குத் தெரிவான மாணவர்களை பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு இன்று பல்கலை கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இன்று காலை சுமார் 0830 மணியளவில் அம்மன் கோவிலடியிலிருந்து குறித்த மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திரு.ஆர்.இரவீந்திரன் (செயலாளர், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சு) மற்றும் திரு.வே.விஸ்வலிங்கம் (தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு செயலகத்தின் வடமாகாண திட்ட இணைப்பாளர், சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர்) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் (வல்வை) ஏற்பாடு செய்யப்படிருந்த இந்த நிகழ்வில் குறித்த மாணவர்களுக்கு மாதா மாதம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உ மா. (Canada)
Posted Date: July 16, 2017 at 00:57
சிதம்பரக்கல்லூரியில் 2016, பரிட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்று சிதம்பராவுக்கு புகழ் தேடித்தந்த மாணவர்களை வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் பாராட்டி வாழ்த்துகிறது.
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்
Images of Valvai.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.