வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தால் நடாத்தப்படும் 2017 ஆம் ஆண்டு வினோத விசித்திர பட்டப் போட்டித் திருவிழாவும் கல்விச் சாதனையாளர்கள் (2016) கெள்ரவிற்பு விழாவும் 14.01.2017 அன்று சனிக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு உதயசூரியன் உல்லாசக் கடற்கரை மடத்தடி, வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது.
இப்பட்டத்திருவிழாவிற்கு தலைவர் திரு.பா.சிவஅன்பு தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.பா டெனீஸ்வரன் (வடமாகாண சபை மீன்பிடி போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சு) அவர்களும், சிறப்பு விருத்தினர் திரு.M.K சிவாஜிலிங்கம் (வடமாகாண சபை உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கவிஞர் திரு.இ ஜெயசீலன் (பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், பருத்தித்துறை) அவர்களும், திரு.ச.பிரசாத் (செயலாளர் நகராட்சி மன்றம் வல்வெட்டித்துறை) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளர்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.