திருவிழா கோலம் பூண்டுள்ள நல்லூர், களை கட்டி வரும் கடைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2014 (திங்கட்கிழமை)
யாழ்பாணத்தின் மிக அதிகளவு பக்தர்களைக் கவரும் வருடாந்த மகோற்சவம் ஆன நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 1 ஆம் திகதி ஆரம்பமாகி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. மகோற்சவத்தையொட்டி பக்தர்கள் அலைமோதும் அதேவேளை சிறு வியாபாரங்களும் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றுவருகின்றது.
கீழே படங்களில் நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக திருவிழாக் கடைகளைக் காணலாம். யாழ் மாநகராட்சி அனுமதியுடன் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள், அலங்கார பொருட்கள், பாத்திரக்கடைகள், குளிர்கழி அகங்கள் போன்ற சிறு கடைகளும், வர்த்தக நிறுவனங்களின், விளம்பர நிலையங்களும் இவற்றுடன் தொண்டு நிறுவனங்களின் நிலையங்களும் நல்லூர் சூழலில் அமைக்கப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பிரதான திருவிழாவான தேர்த் திருவிழா 24 ஆம் திகதியும், தீர்த்தத் திருவிழா 26ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.