ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் - மூன்று கட்டங்களாக கட்டப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2017 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க உத்தேசித்துள்ள கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் அமைக்கும் பணிகள் மூன்று கட்டங்களாக இடம்பெறலாம் என தெரிய வருகிறது.
குறித்த நீச்சல் தடாகத்தை சர்வதேச தரத்திற்கே சர்வதேச போட்டிகளை நடத்தக் கூடிய வகையில் 50M நீளம் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும் இவாறான நீச்சல் தடாகங்கள் வடக்கு - தெற்கு திசையிலே அமைக்கப்பட்ட வேண்டும் என்னும் விதி உள்ளது. ஆனால் நீச்சல் தடாகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு வடக்கு தெற்காக போதியளவு அகலம் இல்லாதால் தற்பொழுது 25M நீளமுடைய 8 தடங்களைக் கொண்ட நீச்சல் தடாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீச்சல் தடாகத்தை மூன்று கட்டங்களாக [ 1 - நீச்சல் தடாகம், 2 - சிறுவர்களுக்கு ஆழமற்ற பகுதி, 3 - குத்துக்கரணம் அடிக்கும் ஆழமான பகுதி (diving section)] அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் முதலில் இரண்டு கட்டங்களை ஏககாலத்தில் அமைப்பது எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய இறுதி முடிவுகள் விரைவில் எடுக்கப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.