நாடகக் கலைஞருடனான சந்திப்பு - 75 ஆம் ஆண்டு அதிரூபசிங்கம் மாஸ்டர் வழங்கியிருந்த பேட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2017 (திங்கட்கிழமை)
கடந்த 6 ஆம் திகதி வல்வையில் இயற்கை எய்திய, வல்வெட்டித்துறையில் சகலராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் 75 களில் மேடை நாடகங்களில் கொடி கட்டிப் பறந்தவர். அன்றைய காலங்களில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட நாடகப் போட்டிகளில் பலத்த போட்டிகளின் மத்தியில் இவர் எழுதி இயக்கி நடித்த நாடகங்களுக்கு பதக்கங்கள் பெற்றவர்.
மகனே கண், படையா கொடையா, அந்தக் குழந்தை போன்ற நாடகங்களில் இன்றளவும் அன்று இப்போட்டிகளைப் பார்த்தவர்களால் பேசப்படும் நாடகங்களில் சிலவாகும்.
இந்தக் காலத்தில் (70 ஆம் ஆண்டு) வல்வையில் இருந்து வெளிவந்திருந்த "அருவி" கையெழுத்துச் சஞ்சிகை இவரைப் பேட்டி கண்டு "நாடகக் கலைஞருடனான சந்திப்பு" எனும் தலைப்பில் ஆக்கம் வெளியிட்டிருந்தது.
ஆசிரியர் திரு.சு.சக்திவடிவேல் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்டிருந்த இந்த சஞ்சிகையில், குறித்த பேட்டியைக் பெற்றவர் திரு.கண்ணன் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.s.thurai (Denmark)
Posted Date: July 11, 2017 at 22:35
இந்த ஆக்கத்தை எனது இளமைக்காலத்தில் படித்தபோது இருந்த உணர்வையும் இப்போது படிக்கும் போது இருக்கும் உணர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அப்போது நமக்கிருந்த அறியாமையை எண்ணிப்பார்க்க இப்போது உதவியாக இருக்கிறது. அன்று எனக்கிருந்த அறியாமையை இன்று எண்ணி வெட்கப்படுகிறேன். இதே போக்கை இன்றிருக்கும் இளைஞர்களில் காண்கிறேன்.
காரணம் அன்று நாடக மன்றங்கள் பகையுடன்தான் இருந்தன, ஆனால் இன்றோ நாமெல்லாம் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறோம். நான் இயக்கிய உயிர்வரை இனித்தாய் திரைப்படத்திற்கு மாஸ்டரை வீடு தேடி சென்று அழைத்துச் சென்றேன், வயது தந்த அனுபவம்.
முத்துச்சாமி அண்ணா அவர்களையும் அழைத்துச் சென்றேன். எனக்கு பட்டமளித்து கௌரவித்ததே வல்வை ஹெலியன்ஸ்தான், எனது திரைப்படங்களை போற்றுவதும் வல்வையின் பழைய நாடகக் கலைஞர்கள்தான்.
ஆனால் இந்த அருவி கட்டுரை வெளிவந்தபோது நிலமை அப்படியில்லை. அது தவறு என்பதை உணர்ந்து நிற்கிறேன்.
காலம் பல நல்ல பாடங்களை கற்றுத்தரும் ஆசான். இன்றுள்ள இளைஞர்கள் இதை புரிய வேண்டும், மேலும் அன்றும் கூட நாடக மன்றங்களுக்குள் இருந்த முரண்பாடுகளை பதிவு செய்ய முடியவில்லை, வெளிப்படையாக பேச முடியவில்லை என்பதை இக்கட்டுரை காட்டுகிறது, இந்த நிலை இன்றும் தொடர்கிறது.
ஆயினும் வாழ்க்கை நல்ல கல்வி என்பதை இக்கட்டுரை உணர்த்துகிறது, இதை வழங்கியது யாரென போடவில்லை அவருக்கும் எனது பாராட்டுக்கள்.
இன்னும் பல உண்டு எழுத இருக்கிறேன்..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.