ஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாகத் தடை - மீறிசெயற்பட்டால் நிர்வாகத்தினர் கைது செய்யப்படுவார்கள் - நெடுங்கேணி பொலிஸ்
இந்த செய்தி கடந்த புதன்கிழமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ஒரு பேசு பொருளாக உருவெடுத்திருந்தது, அதே நாளும் நீதி மன்ற தீர்ப்பின் ஊடாக திருவிழா நடாத்த அனுமதியும் கிடைத்தது என்ற மகிழ்வான செய்தியும் கிடைத்தது, அப்பவே அங்க திருவிழாவிற்கு போறது எண்ட முடிவும் எடுத்திற்றன். அந்த கோவில் எங்க இருக்கு எண்டு தெரியாது? எப்படி போற எண்டும் தெரியாது? யாரோட போற எண்டும் தெரியாது.. பஸ்ல போறது எண்டால் சரியான கஸ்டம் எண்டு மனிதம் அமைப்பின் நண்பன் கஜீபன் பேஸ்புக்குல சொன்னான். சரி என்ன பாடு பட்டாலும் போய் பார்ப்பம்!
ஒவ்வொரு பிரச்சினை வரும் போதும் நாங்க சமூக வலைத்தளங்களில உணர்வுடன் கடந்து போறது தான் கூட. எனி எந்த விசயம் கதைச்சாலும் அது சார்ந்த கொஞ்ச செயற்பாடாவது இருக்கணும் என்ற முடிவு எடுத்து பல மாதம்; வெறுமனவே கருத்து சொல்பவராகவும் பார்வையாளராகவும் இருக்க கூடாது பங்கேற்பாளராக இருக்கணும், அது தான் காலத்தின் தேவையும் கூட
2020.09.17 காலை 5.30மணி
அண்ணா நான் பஸ் ஸ்ராண்டில நிக்கிறன், நீங்க வரவில்லையா என்ற கார்திகாவின் குறுஞ்செய்தியோட என்னை ஏத்த வாற நண்பன் ஜெல்சினின் வரவுக்காக நான் காத்திருக்கிறன். அண்ணா நாங்க பஸ் ஸ்ராண்ட் வாறம் எண்டு பபித்திரன், சிந்து வும் தகவல் தந்திருந்தாங்க. நான் வாட் அப் ல யாரு எல்லாம் வெடுக்குநாறி மலை போக வாறீங்க எண்டு கேட்டு குரூப் எல்லாம் போட்டு திட்டம் போட்டிற்றன். திட்டமிட்டதின் படி 15 நிமிட தாமதத்தின் பின்னர் பதுளை பஸ் ல நாங்க ஏறிட்டம். எங்களோட கடைசியாக வந்து இணைந்தான் வினு.
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேசுவரர் ஆலயம் நெடுங்கேணி ஒலுமடு பிரதேசத்தில் உள்ள காட்டில் அமைந்துள்ளது.
யாழில் இருந்து போன பஸ்ல புளியங்குள சந்தில இறங்கி மீண்டும் வவுனியா- முல்லைத்தீவு பஸ்ல நெடுங்கேணி மகா வித்தியாலயம் இருக்கிற சந்தில இறங்கினம்.. நாங்க போன பேரூந்து நடத்துனருக்கு கூட அந்த கோவில் பத்தி பெருசா தெரியல. தம்பி கோவிலுக்கு போக பொலிஸ் தடை எல்லா எங்க போறீங்க எண்டு கேட்டஐயாவிற்கு எல்லா விளக்கமும் சொல்லிக்கொண்டு எங்கட பயணம் தெரியுது.
வழிபாட்டுக்கு தடை என்ற செய்தி ஊர் முழுக்க பரவி இருக்கு; ஆனால் நீதி மன்ற தடை நீங்கினது பெரிசா கதைக்கப்படல என்பது தான் உண்மை. சமூக வலைத்தளத்திலும் இதே கதை தான். இதனை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் கூட யாரவது ஒருவர் வெடுக்குநாறி மலை ஆலய பூசைக்கு பொலிஸ் தடை எண்ட பழைய செய்தியை பகிர்ந்துகொண்டுதான் இருக்கப்போறார்.
நெடுங்கேணி பேரூந்து தரிப்பு நிலையத்தில் இருந்து எனி கோவிலுக்கு நடந்து போவமா இல்லை, எப்படி போவம் எண்ட கதைகளோட காலமை சாப்பாடாக கார்த்திகா கொண்டு வந்த ரொட்டியுன் கதை போகுது, அது தான் எங்களை 4.00 மணிவரை காப்பாத்த போகுது எண்டு அப்ப தெரியாது.
அதில இருந்து ஏற்கனவே ஜெரா அண்ணா ஊடாக கிடைத்த இணைப்பின் ஊடாக அறிமுகமாகிய வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாக சபை செயலாளர் தமிழ்செல்வன் அண்ணா எங்களுக்கு ஆட்டோ பிடித்து கோவிலுக்கு அனுப்பிவிட்டார். எங்கால உழவு இயந்திரம் மூலம் கோவிலுக்கு போகவும் ஒழுங்குபடுத்திவிட்டார். ஆட்டோ போகும் தூரம் வரை சென்று உழவு இயந்திரம் வர நேரமாகும் எண்டதால காட்டினுள் நடந்து செல்லும் முடிவு உறுதியாகியது.
ஒவ்வொரு பயணங்களின் போதும் கூட வரும் அணி தான் அந்த பயணத்தின் பூரண தன்மையினை தீர்மானிக்கின்றது. உனக்கு இந்த பயணத்திலும் அந்த அணி சரியாகவே அமைந்தது. காட்டினுள் பாதை வழியே எங்கள் பயணம் தொடர்ந்தது. இது ஒரு அடர்ந்த பெரிய மரங்களைக் கொண்டமைந்த பற்றைக்காடு, உழவு இயந்திரத்தில் சென்றிருந்தால் காட்டினுள் நடந்து செல்லும் இனிமையான நினைவுகள் கிடைக்காமலே போய் இருக்கும்.
காலையில் பஸ்லின் ஏறி நெங்கேணி செல்லும் வரை வெடுக்குநாறி மலை முல்லைத்தீவு மாவட்டம் என தான் எனது நினைப்பு இருந்தது, ஏன் புளியங்குளம் கூட வவுனியா மாவட்டம் என நேற்றுத்தான் தெரியும். கேவலம் தான் பராவாயில்லை இப்பவாத்து தெரிந்துகொண்டனே. களத்தில் இறங்கினால் தான் எல்லாம் சரி எண்டு முதலில சொன்ன விசயத்துக்கு இது ஒரு உதாரணம்.
ஒரு மாதிரி நடைக் களை தெரியாமல், காட்டின் குளிர்மையுடன் காட்டுக்கே உண்டான இரைச்சலுடன் மலைக்குகைகள் அமைந்த பகுதியினை வந்தடைந்தோம்.
எல்லாருக்கு எங்கிட பகுதியில் சின்ன சின்ன மலைக்குன்றுகள் இருப்பது பெரிசா தெரியாது. அதுமட்டுமல்ல எங்கட இடத்திலேயே இப்படி ஒரு ஆலயம் இருப்பதும் தெரியாது. பூசைக்கு தடை வர உணர்வு ரீதியாக ஒண்றிணைவோம், அப்படியே அந்தஉணர்வு உறங்கு நிலைக்கு சென்றுவிடும். ஆனால் ஒரு முறையாவது இப்படியான இடங்களுக்கு சென்று வந்தால் உணர்வுடன் கூட இருப்பினை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலெழும்.
அடர்ந்த காட்டின் நடுவே குகைகள் வடிவாலினா மலைகள். கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்குகைகள். இரண்டு பெரிய பாறைகளின் நடுவே குகை வடிவில் இரு கோவில். பிள்ளையார் சிலை, அம்மன் சிலை, மறுபுறம் வைரவர் சிலை. பல காலத்துக்கு பிறகு பெரிய கோபுரம் இல்லாத கலர் கலர் ஆக பெயிண்ட் அடிக்காமல் ஒரு கோவில், கோவில் எண்டால் இப்படி காட்டுக்குள்ள மலைக்குகைக்குள்ள இருக்கணும். சந்தோசமாக கும்பிடும் ஒரு உணர்வு தன்னால வரும்.
அடுத்து ஒரு குன்றின் மீது நீர் நிக்கக்கூடிய ஒரு குளம் எண்டு சொல்ல முடியாது சின்ன கேணி ஒன்று இருக்கு, மழை நீர் தேங்கி இருக்கு. அதின் ஆளம் 8 அடிக்கு மேல வரும்.. நாங்க தடிவிட்டு அளந்து பார்த்தம், அந்த கேணி ஆடி அமாவாசை காலத்தில பிதிர்க்கடன் செய்ய பயன்படுத்துறதாக சொன்னார்கள். அதனைக் கடந்து 300 மீற்றர் உயரமான ஒரு மலை. அதற்கு படிக்கட்டு எல்லாம் இரும்பில செய்து போட்டு இருக்கின்றார்கள். வட மாகாண சபைக் காலத்தில பண்பாட்டலுவல்கள் அமைச்சின் நிதியின் போடப்பட்டதாம்.
ஒரு மாதிரி மலைக் குன்றின் உச்சிக்கு வந்தடைந்தோம். நான்கு புறமும் காடு தூரத்தில் மலைக் குன்றுகள் என வீசும் குளிர் காற்றின் நடுவே சிவலிங்கமும் பக்கத்திலே பிள்ளையாரும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. சுத்தி பார்த்தால் முழுவதுமே காடு, பலமாக காற்று வீசிக்கொண்டிருந்தது. அனைவருமே வாழ்வில் ஒரு முறையாவது இங்க வந்து போகணும்.
எங்கட இருப்பு, எங்கட நிலம், எங்கட தனித்துவம் எண்டு சிந்திக்கிற ஆக்கள் கட்டாயமாக வருடத்தில் ஒரு முறையாவது இந்த கோவிலுக்கு குடும்பத்தோட வந்து கும்பிட்டு ஒரு நாளை சந்தோசமாக செலவிட்டு செல்லுங்கள்.
நாங்க மலை சிவலிங்க கோவிலில் நிக்கும் போது தான் சீருடை அணியாத பொலிசார் மேல வந்து வளைச்சு வளைச்சு போட்டா எடுத்தாங்க, நாங்க மட்டும் குறைச்சலா 2 ஐ போன் வைச்சு நாங்களும் கிட்டத்தட்ட 7ஜிபிக்கு படம் எடுத்தம். நண்பன் ஜெல்சின் எடுத்த படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருவதை பார்த்து இருப்பீங்கள். எங்கட பயணம் பல பேறை இங்க வர வைக்கணும் எண்டதில நாங்க சரியான ஆர்வமாக இருக்கம். சிறகுகள் மூலம் அறிமுகமான தம்பிமார் சுதன், நிவேதன் அவங்கட நண்பர்களோட வவுனியா, கற்சிலை மடுவில இருந்து வந்திருந்தாங்கள்.
நாங்க எதிர்பார்த்து சென்றதனை விட அங்க ஆக்கள் குறைவு தான்.. நீதி மன்ற அனுமதி கிடைத்த தகவல் தெரியாததும், நமக்கு எதுக்கு வம்பு இருக்கிற இடம் தெரியாமல் இருப்பம் எண்ட எங்க மனநிலையும் தான் காரணமாக இருக்கும். யாரையும் குறை சொல்ல முடியாது. எல்லாம் அவர் அவர் விருப்பம். ஆனால் எல்லாரையும் வர வைக்கணும்.
மலையில் இருந்து இறங்கி கிழே வரும் போது ஏறும் போது இருந்ததை விட ஆக்கள் கொஞ்சம் கூட இருந்தனர், சமையலுக்கான வேலைகள் ஆரம்பம். மரக்கறி வெட்டல் மற்றும் தேங்காய் துருவும் பணிகளில் நாமும் இணைந்தோம். நாங்க எங்க செய்யிற வேலைகளை அம்மாமார் பார்த்தால் தான் தெரியும், வீட்டில அதில இருக்கிறத இதில எடுத்து வைக்கமாட்டம். எருமைப் பால் தேனீரும் எமக்கு வழங்கப்பட்டது,
கோவில் பூசகரிடம் வரலாறுகளை கதையாக கேட்டு தெரிந்துகொண்டம், செய்ய வேண்டிய வேலை என்ன எண்டால் வரலாற்று ஆய்வாளர்களின் உதவியோட இந்த கோவில் தொடர்பில் ஒரு புத்தகம், கையேடு அல்லது மின்னூல் ஆவது வெளியிட வேணும்.
5 தலைமுறைகளாக ஆகம விதிகளுக்கு அமையாது குலதெய்வ வழிபாட்டு முறைமையில் பூசைகள் நடைபெறுவதுடன், நினைத்தவை நடக்கும் சக்தி வாய்ந்த ஆலயமாகவும் குறிப்பிட்டார்.
புளொட் இயக்கம் முன்னைய காலத்தில் இந்த மலைப் பகுதியினை கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தமையுடன், பின்னைய காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டில் இருந்துள்ளது. சமாதான காலத்தில் மக்களின் வழிபாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, மீண்டும் மீள் குடியேற்றத்தின் பின்னர் வனத்துறை, தொல்லியல்துறையின் அதீத கட்டுப்பாடுகளினால் இலகுவாக இந்த கோவிலின் வழிபாடு சிக்கலாக வந்தமைந்துள்ளது.
திருவிழாக் காலம், முழு நிலா நாட்கள், வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு பக்தர்கள் வருகைதரலாம். சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
நடைபெற்ற பூசைகளைத் தொடர்ந்து 4.00 மணிக்கு ஒன்றாய் கூடி இருந்து சமைத்த உணவினை சுடச்சுட சாப்பிட்டுவிட்டு உழவு இயந்திரத்தில் நெடுங்கேணி சந்திக்கு வந்து அங்கிருந்து அம்பாறை- முல்லைத்தீவு பேரூந்தில் புளியங்குளம் சந்தியை வந்தடைந்து அங்கிருந்து யாழ் வர 8.30 மணியாகியது.
எமது தொன்மையான ஒரு இடத்திற்கு சென்று வந்த மகிழ்வுடன் கனக்க கேள்விகள் தான் மனதில ஓடுது.=
1. இந்த கோவில் வழிபாட்டில் பிரதேச மக்களின் ஆதீத ஈடுபாடு உருவாகணும்.
2. இந்த ஆலயம் தொடர்பிலான ஆவணங்கள், புத்தகங்கள் வெளியிட வேணும். ( யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இதை எல்லாம் கையில எடுக்க வேணும்)
3. வருடத்தில் ஒரு முறையாவது இங்கு குடும்பத்துடன் வந்து ஒரு நாளினை எமது பிரதேசம், எமது ஆலயம் எனும் அடையாளத்துடன் செலவிட வேண்டும்.
4. இப்பாடியான எல்லைக் கிராம ஆலயங்கள், தொன்மங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சுற்றுலாக்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேசுவரர் ஆலய இறுதி நாள் திருவிழாவில் 101 பானை வைத்து பொங்கல் விழா கோலாகலமாக இடம்பெறவுள்ளது. நீங்களும் உரிமையுடன் ஒரு பானையினை பொறுப்பெடுத்து பொங்கலை நடாத்தமுடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.