Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

உடுக்கு ஆனந்தி அப்பா

பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2022 (செவ்வாய்க்கிழமை)

ஈழத்தின்  வடக்காம் வல்வையின் குச்சம் ஒழுங்கையில் பிறந்து வாழ்ந்தவர் ஆனந்தி அப்பா. இவரை ‘உடுக்கு ஆனந்தி அப்பா’ என்றுதான் செல்லமாக அழைத்தார்கள். அமரர்கள் கணபதிப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தவர். தந்தையார் கணபதிப்பிள்ளை அவர்கள் கப்பலோட்டிய தமிழர்களில் ஒருவரே. இந்தியாவின் புராதன பல துறைமுகங்களுக்கும், ரங்கூனுக்கும் பல தடவை சென்றுவந்துள்ளார்.

தனது பரந்த நெற்றியிலே சிவ சின்னங்களில் ஒன்றான விபூதியை முக்குறியிட்டு, மெலிதாக வெற்றிலையை போட்டபடி, பொதுவாக வெட்டியுடன் காணப்படுவார் ஆனந்தி அப்பா.

சிறுவயதில் கிட்டிப்புல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, புல் பட்டு தனது ஒரு கண் பார்வையை பாதியாக இழந்தார். இதனைத் தொடர்ந்து பார்வை கோளாறு அதிகமாகி இரண்டு கண்களிலும் பார்வை தாக்கம் ஏற்பட்டு, மாலையின் பின்னர் முற்று முழுதான பார்வையையும் இழந்து, பகலில் மிக மங்கலான பார்வையை மட்டும் வாழ்வின் பெரும் பகுதியில் பெற்றிருந்தார்.

பார்வையை இழந்திருந்தாலும் தனது இளமையில் கற்ற உடுக்கு கலையை இவர் கை விடவில்லை. உடுக்கு அடிப்புடன் மட்டுமின்றி தனது கம்பீரக் குரலில் பாடும் வல்லமையையும் பெற்றிருந்தார்.

அமரர் கலாபூஷணம் சித்தரவேல் (அண்ணாவியார்), அமரர் சாமிக்கண்டு (மேத்திரியார்), அமரர் கலாபூஷணம் சிவலிங்கம் (கடற்புலிகளின் தளபதி திரு.சூசையின் சகோதரர்), அமரர் ராசா, வல்லிபுர கோவில் பரந்தாமன் ஆச்சிரம நடாத்துனர் திரு.குட்டி போன்றோர்களைக் கொண்ட உடுக்கு அணியின் பிதாமகன்  இவரே என்றால் மிகையாகாது.

தற்பொழுது ஊரிலும் சரி, புலம் பெயர் நாடுகளிலும் சரி உடுக்கு வாத்தியக் கலைஞர்களாக உள்ள பலரின் குருமார்களில் பிரதானமானவர் இவரே.

வல்வையின் தற்கால உடுக்கு வாத்தியக் கலைஞர்கள் சிலர் 

அன்னாரின் பெறாமக்களான அமரர் காத்தாமுத்துவின் பிள்ளைகள் ஞானவேல், ராசவேல், வெற்றிவேல் ஆகியோர் அன்னாரின் வழியைப் பின்பற்றி இன்று உடுக்கு வாத்தியத்தை ஊரிலும், புலம் பெயர் தேசங்களிலும் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்தி அப்பா அம்பாளை நினைத்து அம்மன் அழைப்பு, பிள்ளையார் அழைப்பு, காப்பதம் பாடினால் அம்பாளே தொண்டர்கள் மூலம் கலையாடி, காட்சி கொடுக்கும் அளவுக்கு உடுக்கு வாத்தியத்தைக் உச்சிக்கு கொண்டு செல்லக்கூடியவராக விளங்கினார்.

அம்மன் கோவில் திருவிழாக்காலங்களிலும், கரக நாட்களிலும் மாலை வேளைகளில் ஆனந்தி அப்பாவின் இளையமகள் ரோகிணி, தந்தையாரை கையைப் பிடித்து செல்வதை பலரும் 90 க்கு முந்தய காலப் பகுதிகளில் பார்த்திருப்பீர்கள்.     

தனக்கென்று தனித்துவமான மெட்டுக்கள் அமைத்து, பாட்டிலே, பாட்டின் அடியிலே அரவம் வைத்து, இழுக்க வேண்டிய இடத்தில் இழுத்து, அதற்கு ஏதுவாக உடுக்கை ஒரு விதமாக உருட்டி அடித்து, சக கலைஞர்களைக் காட்டிலும் மெருகூட்டி உடுக்கு இசை வழங்குவதில் கை தேர்ந்தவர்.

அவரின் கம்பீரக் குரலில் கரக மெட்டுடன் உடுக்கு அடித்துப் பாடினால் தூரத்தில் நிற்போரைக் கூட அவரின் உடுக்கு இசை சுண்டி இழுக்கும்.

கரகமான து நெடியாகாட்டு பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மன் கோவில் நோக்கி திரும்பி வரும்போது, எந்தெந்த இடங்களில் பறை ஓசை, எந்தெந்த இடங்களில் உடுக்கு ஓசை என்பதை தீர்மானிக்கும் உன்னத ஆற்றல் படைத்தவர்.

பிள்ளையார் பாட்டு, முருகன் பாட்டு, காளி பாட்டு, வைரவர் பாட்டு, முத்துமாரி பாட்டு, கும்மிப் பாட்டு, மாரியம்மாள் தாலாட்டு, அம்பாள் பூ எடுக்கும் பாட்டு, அம்பாள் சுபோகம், அம்பாள் அழைப்பு, காப்பு என்று முழுப் பாட்டு தொகுதிகளையும் மனப் பாடம் செய்து வைத்திருந்தார்.

உடுக்குக்கு அப்பால், களுத்திலே சுளுக்கு வந்தால் ஆனந்தி அப்பாவிடம் சென்றால் விபூதியை எடுத்து பத்திரிக்கையில் தடவி உடுக்கு எடுத்து அடித்து பக்தியோடு பாடினால் சுளுக்கு மறைந்துவிடும். மேலும் பூரான், தேள் கடிக்கும் இதுபோல் கடவுள் வைத்தியம்  பார்த்துள்ளார். உண்மையோ பொய்யோ, இவ்வாறு அவரிடம் வைத்தியம் பெற்றவர்கள் பலர் இன்றும் உள்ளார்கள்.

கண்பார்வை கோளாறு வாழ்க்கைக்கு ஒரு தடையல்ல என்பதை உடுக்கு வாத்தியத்தில் மட்டுமின்றி, தனது மீன்பிடித் தொழிலும் நிரூபித்தவர். மரம் பிணைத்து மீன்பிடிக்க சென்றால், தனது பெண் பிள்ளைகள் கரையிலிருந்து கொடுக்கும் சத்தத்தை வைத்து கரை திரும்புவார்.

ஒரு கலைஞன் எம்மோடு இல்லாத போதுதான் அவர்களின் பெறுமதியை உணரக் கூடியதாகவுள்ளது.

உடுக்கு கலையாலும், ஊர்ப்பற்றாலும் சிறிது உந்தப்பட்ட நான், ஆனந்தி அப்பாவைப் பற்றி இன்று உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி எழுதுங்கள் என்று ஆதவன் அண்ணாவோடு கதைக்கும் பொழுது அண்மையில் கேட்டேன். அதற்கு அவர் என்னையே எழுதக்கூறி உற்சாகப்படுத்தினார்.

நான் பார்த்த கேள்வியுற்ற ஆனந்தி அப்பா பற்றிய சிறு குறிப்பை எனது கன்னி முயற்சியாக எழுதியதில் மகிழ்ச்சி. அதுவும் அம்பாளின் விழாக்காலத்தில் எழுதியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஆனாலும் இரண்டு சிறு வருத்தங்கள்

ஆனந்தி அப்பாவின் பிள்ளைகள் அனைவரும் பெண் பிள்ளைகள். இறுதி வரை வசதி இன்றி வாழ்ந்தவர். இந்த காரணத்தினாலோ என்னவோ தெரியவில்லை - இவர் ஒரு கலைஞர் என்று கெளரவிக்கப்படாதவர்களில்  ஒருவர் ஆகி விட்டார் போலும்.

இந்தக் குறிப்புடன் ஆனந்தி அப்பாவின் ஒரு படத்தை பிரசுரிக்க பெரிதும் முயன்றேன். குடும்பத்தினரிடம் கூட ஒரு படம் கூட இல்லை.

பாலகிருஷ்ணன் நிரஞ்சன்


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
சேசெதெய்வச்சந்நிரன் (இங்கிலாந்து) Posted Date: April 13, 2022 at 14:00 
ஆனந்தியப்பா நாடி பிடித்துப் பார்பதிலும் கைதேர்ந்தவர். ஒருவர ம்ணப்படுக்கையில் இருக்கும் போது கொழம்பு பிரதேசத்தில் இருப்பவர்கள் இவரின் நாடிக்கணிப்பால் பலரை உயிருடன் பார்த்த சம்பவங்களும் உண்டு.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
உலகின் சராசரி வெப்பநிலை விரைவில் அதிகரிக்கும் - ஐ.நா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2024 (வெள்ளிக்கிழமை)
"ஈழத்தின் மாமன்னன் பல்லவராயன்" சிலை திறப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 05/06/2024 (புதன்கிழமை)
அறநெறிப் பாடசாலை கையளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2024 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2024 (சனிக்கிழமை)
சற்குணராஜா நிமலன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2024 (வியாழக்கிழமை)
அமரர் திரு அம்பிகைபாகர் வேதவனம் - ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2024 (செவ்வாய்க்கிழமை)
இன்றைய நாளில் – உள்நாட்டு யுத்தத்தின் முதலாவது இராணுவ நடவடிக்கை 'ஒபரேஷன் லிபரேஷன்'
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஊரணி வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2024 (சனிக்கிழமை)
புதிய மருத்துவ பீட வாளாகம் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2024 (வெள்ளிக்கிழமை)
முன்னாள் நகரசபை செயலரின் மகள் விபத்தில் மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2024 (வெள்ளிக்கிழமை)
வங்காள விரிகுடாவில் புயலுக்கு ரிமல் எனப் பெயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2024 (வியாழக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2024 (செவ்வாய்க்கிழமை)
ஊரணி மயானம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கடற்கரை சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
A/L (2026) புதிய வகுப்புகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
கடலுக்குள் நடத்தப்பட்ட கையிறிழுத்தல் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2024 (வெள்ளிக்கிழமை)
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதல்தடவையாக வீர வணக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
ஆழமான கருத்தைக்கூறும் கார்ட்டூன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2024 (புதன்கிழமை)
மயிலியதனை இந்து மயானத்தில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2024 (திங்கட்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2024>>>
SunMonTueWedThuFriSat
      1
23
4
5
6
78
9
10
11121314
15
161718
19
20
21
22
2324
25
26
272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai