திரு.தம்பையா லங்காநேசன் அண்மையில் கொழும்பில் 'கருத்திட்ட முகாமைத்துவம்' (Project Management) என்னும் நூலை எழுதி வெளியிட்டிருந்தார். திரு.லங்காநேசன் அவர்கள்பற்றி, பொதுத்திறைசேரி நிதி அமைச்சின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களப் பணிப்பாளார் திரு அ.விமலேந்திரராஜா அவர்கள் தனது முன்னுரையில்வரைந்திருந்த கருத்துக்கள்......
திரு.லங்காநேசன் தனது அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்துவதற்காக உள்நாட்டில் பல கற்கை நேறிகளைப் பயின்றார். பதினைந்து வெளிநாடுகளில், இருபத்திரண்டு ஆய்வரங்கு களிலும் மாநாடுகளிலும் பயிற்சிப்பட்டறைகளிலும் பங்குபற்றினார். திட்டமிடலும் அபிவிருத்தி என்ற நெறியில் இத்தாலியில் டிப்ளோமாப் பட்டமும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கருத்திட்ட பகுப் பாய்வு கருத்திட்ட முகாமைத்துவம், கருத்திட்ட கணக்கு வைப்புமுறை ஆகிய கற்கைநெறியில் புலமைசார்ந்த பயிற்சிபெற்றார். வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்காக அவர் ஆற்றிய சேவை மக்கள் மனதைவிட்டு அகலாதவை.
திரு.லங்காநேசன் போரினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்குப் பிரதேசங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இருபதாயிரம் மில்லியனுக்குமேலான பெறுமதியான பத்து கருத்திட்டங் களின் இயக்குநராக கடமையாற்றினார். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட உப கருத்திட்டங்களை அமுல்படுத்தி போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு புத்துயிர் அழித்து வரலாற்றில் தடம்பதித்தார். என குறிப்பிட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் காலம்சென்ற அமைச்சர் அஷ்ரப் அவர்களுடன் சேர்ந்து உழைத்தார். முந்நூறு மில்லியன் செலவில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட நவீன வைத்தியசாலை கிராமப்புற மக்களுக்காக அவருடைய சேவையின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது.
மேலும் பேராசிரியர் யோகராசநாயகம் ஊhயnஉநடடழச நுயளவநசn ருniஎநசளவைல ளுசi டுயமெயஇ திரு.செல்லத் துரை கதிர்காமத்தம்பி சென்.ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம், திரு.இ.உமாகாந்தன் பிரதிப்பிரதம செயலாளர் வடக்குமாகாணசபை ஆகியோரும் பாராட்டுரை நூலில் வழங்கியுள்ளனர்.
இந்துசமயம் சம்பந்தமாகவும் அவர் தனது பிறந்தஊரான கற்கோவளத்திலுள்ள வீரபத்திரர் ஆலயம், கடற்கரை கிருஷ்ணர் ஆலயம், பத்தினியம்மன் ஆலயம் ஆகியவற்றை புனருத்தாரணம் ஆகியவற்றிற்கு முன்நின்று உழைத்தார். தனது புகுந்த இடமான வல்வெட்டித்துறையில் அ.மி.பாட சாலைக்கு புதிய மாடிக்கட்டிடம், சிதம்பராபாடசாலைக்கு புதிய மாடிக்கட்டிடம். சிவகுரு வித்தியா சாலைக்கு புதிய கட்டிடம். ஊறணி வைத்தியசாலைக்கு ஒரு நிர்வாகக் கட்டிடமும் யுஅடிரடயnஉந வண்டிக்கும் ஒழுங்கு செய்தார். கருத்திட்டம் பற்றிய சிந்தனை விருத்தியை வாசகர்க்ள் மத்தியில் உருவாக்கும் கருவியாக இந்தநூல் அமையும் என்ற நம்பிக்கையுடன் எழுதியுள்ளதாக திரு.லங்கா நேசன் கூறியுள்ளார். இந்நூலை எழுதுவதற்கு உசாத்துணை நூலாக எந்த நூலையும் பாவிக்காமல் தனது சொந்த அனுபவத்தைக் கொண்டு எழுதியமை இந்நூலுக்கு மேலும் சிறப்பைத் தருகிறது. திரு.லங்காநேசன் குடும்பத்தினரை சென்றவாரம் கனடாவந்தபோது நாம் சந்தித்தபோது எமது ஆவணக்காப்பகத்திற்கு தனது புத்தகத்தை அன்பளிப்புச் செய்திருந்தார்.
க.அ.விமலேந்திரராஜா,
B.A Econ (Hons), L.L.B, M.B.A, MPhil,Attorney at Law,S.L.A.S
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.