ஆறுமுகப்பாலன் தூது சென்ற வீரபாகுத்தேவர் பாதச்சுவடும் சந்நிதி காலப் பூசனை புரிந்த சந்நிதி ஆற்றங்கரை ஓடைக்கரையருகே வேதநாயகம் ஜயர் இராசவேல்மணி அம்மா அவர்களது மடத்தில் அன்பர் அதிரூபசிங்கம் அவரது சகோதரன் உடன் தாயாரின் அரவணைப்பில் சிறுவயது தொடக்கி இளம்பராயத்தை சந்நிதி சந்தப்பெருமான் கவர்ந்தான்.
அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம்
அக்காலத்தில் மருதர் கதிர்காமரது வம்ச பரம்பரையினருடன் சேரும் வாய்ப்புப் பெற்றார். புவியினில் புகழ் பூண்ட பூவரசம் மரத்தமர்ந்த பூரணன், வேலன் முருகன் தன்னை பூசிக்க மருதர் கதிர்காமரை தடுத்தாட் கொண்டு வல்லியாற்றருகே ஆலயம் அமைத்து பூசனை வழிபாடுகளை செய்ய ஏற்று ஆற்றப்படுத்தினார்.
கதிர்காமரின் பூசனைக்கு பூ தொண்டர் எனும் புதுமையுடன் சந்நிதியில் தொண்டர் குழாத்தை நிறுவி நித்திய நைமித்திய பூசனைகளைத் தொடர அருள்பாலித்தார். தொண்டர் வம்சமும் பெருமையுடன் பூ தொண்டுடன் ஆலய தேவையுடானாகிய பணிகளையும் தொடர அருள் புரிந்தார்.
அங்ஙனமாகிய பெருமையாகவும் வம்ச அடியவராகவும் ஆறுமுகம் அவர்கள் ஆதிரூபசிங்கம் எனும் ஆசிரியர் முருகப்பெருமானின் தொண்டு புரிந்து வந்தார். தமது தொழில் (இ.போ.ச + ஆசிரியர்) காலத்திலும் சந்நிதி வந்து தொண்டு புரிவதில் அதிக ஆர்வமாக மதித்து ஒழுகிய அன்பர். பூ எடுத்தல் நிமித்தமாக தென்மராட்சி வலிகாமம் முதலிய இடங்கட்கும் கால் நடையாக சென்று மீளிவதை பெருமையாகவே பேசுவார்.
இளம்வயதில் அமரத்துவம் அடைந்த அண்ணா ஆ.பாலசுப்பிரமணியம் அவர்களுடன் தாம் சேர்ந்து கல்வி மற்றும் ஆலய தொண்டு செய்து பழகியதை பெருமையாக பேசுவார்.
தம்மிலும் இளையவர் தமது மைந்தரிலும் சிறுவராக இருந்தாலும் தாழ்மையாக மரியாதையாக அவர் பெயருடன் ஜயா என அன்பாக அழைப்பது அவரது பண்பு. "கீழோர் ஆயினும் தாழ உரை" தமது தேகம் முதுமை காரணமாக நலிந்தாலும் " உள்ளத்தில் வேலணை நினைத்தால் தன்னை தொண்டு புரிய உள்ளே நின்று இயங்குவான் " என பெருமைகள் பேசுவார்.
இளவயதில் அமரத்துவம் அடைந்த அண்ணா ஆ.பாலசுப்பிரமணியம் அவர்களுடன் நட்பு பூண்டு தொண்டு புரிந்ததை நினைவு கூர்வார்.
தமது விடாமுயற்சியினால் கல்வியை கற்பித்து தாமும் கற்று (கலைமானி) B.A பட்டமும் பெற்றார்.
தாம் வாழ்வில் அனுபூதியில் பெற்ற பேற்றினால் ஆறுமுகப்பாலன் இவன் ஆற்றங்கரை வேலன் எனும் தலைப்புக் கொண்ட அரிய படங்களுடன் கூடிய ஆவண சான்று படைப்பாக சந்நிதி வேலன் தான் அன்பன் உள்ளத்தில் இருந்து புத்தக வடிவாக பூ தொண்டர் பெருமையினை வெளிக்கொணர்ந்தார்.
பூ எடுத்தல் செண்டு கடதேல் மாலை கட்டுதல் செடி வேலைகள் பூசைக்குரிய தீபங்கள் தயார் படுத்தல் அதனுடன் "மடி""பூ" தேர்ந்து சேகரித்து தருதல் என்றெல்லாம் நடைபெறும்.
இவை மட்டுமல்லாது பல சமுக பொது சேவைகள் புரிந்து தமது புதல்வர்களையும் "தந்தை போல் மைந்தரும்" தொடர நிழல் தரும் பயனுள்ள மரங்கள் ஆற்றங்கரை அருகே நாட்டுவித்தார். இறை இன்பப்பேறு பெற்றார். அன்னாரது யாக்கை மறைவினால் துயரும் குடும்பத்தார் மற்றும் எல்லோர்க்கும் மன ஆறுதல் பெற அன்பர் ஒழுகிய ஒழுக்க வாழ்ந்த வாழ்வு ஆற்றிய அற பணியை நினைத்து துயரை கடந்து பெருமைகள் பேசி நிலையான முருகப்பெருமானின் திருவடி நிழலில் சேருகின்ற பேரின்ப வாழ்விற்கு ஆட்படுவோமாக.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.