1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் நடைபெற்ற துயர சம்பவம் ஒன்றில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். 1989 வல்வைப்படுகொலைகள் என பொதுவாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பற்றி விக்கிபீடியா அதன் ஆங்கிலப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதன் தமிழாக்கம் வருமாறு,
இதை 1989 வல்வைப் படுகொலைகள் உடன் தொடர்பு படுத்தி குழம்ப வேண்டாம் எனும் குறிப்புடன் பந்தி ஆரம்பமாகின்றது
1989 வல்வைப் படுகொலைகள் (The 1989 Valvettiturai massacre)1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, யாழ் தீபகற்பத்தில் அமைந்துள்ள சிறிய கரையோர நகரான வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இந்திய அமைதி காக்கும் படையைச் (Indian Peace Keeping Force) சேர்ந்த இராணுவத்தினரால் சுமார் 64 போது மக்கள் கொல்லப்பட்டார்கள்.
குறித்த படுகொலை இந்திய அமைதி காக்கும் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் ஒன்றைத் தொடர்ந்தே இடம்பெற்றது.
போராளிகளின் தாக்குதலில் ஒரு இராணுவ அதிகாரி உட்பட்ட 6 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 10 இராணுவத்தினர் காயமடைந்தனர்.
இந்திய இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இடையில் சிக்கிக் கொண்டதாலேயே பொது மக்கள் கொல்லப்பட்டனர் என இந்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆதாரமாக வைத்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் (Indian Express) ரீட்டா செபஸ்தியான், பைனாசியல் டைம் பத்திரிக்கையின் David Husego, மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பான University Teachers for Human Rightsசம்பவத்தை பொதுமக்கள் மீதான ஒரு படுகொலை என பதிவு செய்துள்ளன.
பின்னாளில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஆக இருந்த (1998–2004) ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தப் படுகொலையை இந்தியாவின் மைலாய் My Lai என விவரித்திருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.