வல்வையில் வடிவமைக்கப்பட்டுவரும் வேளாங்கண்ணி மாதாவை ஒத்த தேவாலாயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2017 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் மாதா தேவாலாயம் ஒன்று வடிவமைக்கப்பட்டுவருகின்றது. தமிழகத்தின் கடலோர மாவட்டமான நாக பட்டிணத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தின் முகப்பை ஒத்த வடிவில் இது கட்டப்பட்டுவருகின்றது.
1985 ஆம் ஆண்டு மாசி 28 ஆம் திகதி, வல்வை ரேவடிப் பகுதியில் உருவகம் பெற்ற குறித்த இந்த மாதா தேவாலயத்தை புணரமைக்கும் வகையிலேயே இதே பகுதியைச் சேர்ந்த திரு இரேசேந்திரம் செல்வசிகாமணி (துரைக் கண்ணன்) குடும்பத்தினால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்கப் பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 28 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.அழகேந்திரராசா (வெள்ளை அண்ணா) மேஸ்திரி தலைமையிலான கட்டடப் பணியாட்களால் கட்டப்பட்டுவரும், தோற்றத்தில் வேளாங்கண்ணி மாதா கோயிலை ஒத்தே காணப்படுவதால், இவர்களின் கட்டடக்கலை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அத்துடன் இலங்கையில் இவ்வாறனதொரு வடிவம் கொண்ட மாதா கோயில் அமையப்பெறுவது இங்கேயே என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.