பலாலியில் A 320, A 321 விமானங்கள் தரையிறங்ககூடிய 3500m ஓடுபாதை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2019 (திங்கட்கிழமை)
பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை இந்த வருட மத்தியில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
A-320 மற்றும் A-321 அளவிலான விமானங்கள் தரையிறங்ககூடிய வகையில் 3500 மீற்றர் ஓடு பாதை ஒன்று அமைக்கபடவுள்ளது. நவீனமய நடவடிக்கைக்காக 30 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரம சிங்க யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த நவீனமய பணிகள் தொடர்பில் விசேட பேச்சு வார்த்தை இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் விமான படை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.. இந்த நவீனமய நடவடிக்கையுடன் பலாலியில் இருந்து 7200 கிலோமீற்றர் தூரத்துக்குள் நேரடி விமான சேவைக்கான வசதியும் செய்யப்படவுள்ளது. இந்தியா அவுஸ்திரேலியா சீனா யப்பான் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கு ஊடாக விமான சேவைகளை மேற்கொள்ள முடியும். இதன் ஊடாக வடக்கு மக்களுக்கு பல வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதுடன் சுற்றுளா தொழில்துறையில் பாரிய வளர்ச்சி ஏற்புடும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி நடவடிக்கையின் முதற்கட்டத்தில் ஓடு பாதையை அமைப்பதற்கு முக்கியத்துவம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். வெளியேறுதல் மற்றும் உட்பிரவேசித்தல் பணிகளுக்காக தற்காலிக கட்டிடங்களை பயன்படுத்த முடியும். உலகில் பெரும்பாலான நாடுகளில் இவ்வாறு தற்காலிக கட்டிடங்கள் பயன்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். (News.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.