முதுகல்விமாணி பட்டத்தினை பெற்ற சாந்தகுமார் ஆசிரியர்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2019 (வெள்ளிக்கிழமை)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 22.01.2019 அன்று நடைபெற்ற 34வது பட்டமளிப்பு விழாவில் முதுகல்விமாணி(M.Ed First class) பட்டத்தினை வல்வெட்டித்துறை சேர்ந்த திரு ராஜதுரை சாந்தகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரி சிறி சேனா அவர்களிடமிருந்து நல்லாசிரியருக்கான "குரு பிரதீபா பிரபா" பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வை மானாங்கானையைச் சேர்ந்த 40 வயதாகும் இவர், தனது ஆரம்பக் கல்வியை கணபதி பாலர் பாடசாலையிலும், தரம் 1 முதல் தரம் 5 வரை வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திலும், பின்னர் வல்வை சிதம்பரக் கல்லூரியிலும் கல்வி கற்றிருந்தார்.
ஆசிரியர் சேவையினை கடந்த 8 வருடங்களுக்கு மேலாக சிதம்பராக் கல்லூரியிலும் தற்பொழுது உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும் ஆற்றிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: February 02, 2019 at 21:31
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சாந்தகுமார் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.