கடந்த 11.11.2020 அன்று இறைபதமடைந்த அமரர் வீரகத்திப்பிள்ளை தனுஷ்கோடி அம்மா (தவமணி) அவர்கள் மறைவு செய்தி அறிந்து நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி வாயிலாகவும் அனுதாபச் செய்திகளை பகிந்தும் மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவரின் 31 ஆம் நாள் அந்தியேட்டிக்கிரியைகள் 11-12-2020 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 05.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின் ஊரணி தீர்த்தக் கடற்கரையில் அஸ்தி கரைக்கப்படும்.
அவரது ஊரிக்காட்டில் உள்ள இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மத்திய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.