31ம் நாள் நினைவஞ்சலி அழைப்பு - செல்வமணி விஜயகுமரகுரு (செல்வா, செல்வி)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2019 (வெள்ளிக்கிழமை)
31ம் நாள் நினைவஞ்சலி அழைப்பும், நன்றி நவிலலும்
செல்வமணி விஜயகுமரகுரு (செல்வா, செல்வி)
யாழ். வல்வெட்டித்துறைகாட்டுவளவைப் பூர்வீகமாகவும், மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வமணி விஜயகுமரகுரு அவர்களின் 31ம்நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் முப்பத்தொன்று கடந்து ஓடியதே
எம் ஈர விழிக் கண்ணீர் மட்டும் ஓயவில்லையே
சிரிப்புடன் அழகாக வாழ்ந்த உங்களை
ஈசன் அழைத்துச் சென்றானோ!
மாறாத உங்கள் அழகிய முகமும்
அன்பான பேச்சும் எம்மை வாட்டுதே !
நாளும் பொழுதும் நாம் வாடுகின்றோம்
உங்கள் நினைவுகளால்!!
அல்லும் பகலும் அயராது உழைத்து
நல்ல மனையாளாய் அன்புத் தாயாய் வாழ்ந்தாயம்மா!
பிறந்த இடம்சிறக்க புகுந்த இடம் செழிக்க வாழ்ந்தாயம்மா!
எத்தனை இடர்வரினும் அத்தனையும் மறந்து
அன்பாக பேசி ஆறுதலடையச் செய்தீரே!
உள்ளம் உருகுதம்மா உம்பிரிவு தாங்காமல்
எம்மை எல்லாம் பரிதவிக்க விட்டு எங்கே சென்றீர்கள்
உம்மோடு வாழ்ந்த பசுமையான நினைவுகள்
என்றும் எம்மை விட்டகலாதம்மா
இறையடி இணைந்தே
இளைப்பாறுவீர்!!!
கடந்த 31-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்ப ஒளிவிளக்கு செல்வமணி விஜயகுமரகுரு அவர்களின் மறைவுச்செய்தியை அறிந்து நேரிலும், தொலைபேசி மூலமும், வேறு வகையிலும் ஆறுதல் கூறியும், அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டும் எம் ஆறாத்துயரில் பங்குகொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Sri Raja Rajeswari Amman Temple, No:4 Dell Lane, Stoneleigh, EPSOM, KT17 2NE எனும் முகவரியில் நடைபெறும்.
அன்னாரின் ஆத்மசாந்திக்காக நடைபெறவுள்ள அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன்அழைக்கின்றோம் தயவுசெய்து இதனைத்தனிப்பட்ட அழைப்பாகக் கருதிவருகை தருமாறுவேண்டுகின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.