வல்வெட்டித்ததுறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நடராசா தவமனோகரன் அவர்கள் கடந்த 05.06.2016ல் இறைவனடி சேர்ந்தார்.
எம்குலவிளக்கு, எம்பாசதீபம் எமைவிட்டுப் பிரிந்த 31ம் நாள் அந்தியேட்டிக கிரியை எதிர்வரும் 05-07-2016 அதிகாலை Southend Sea ல் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து எமது இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப்பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அத்துடன் எமது இழப்பை அறிந்து இதுவரை தமது சதுர உதவிகளையும் தந்து பக்கத்துணையாய் இருந்தவர்களுகும், நேரில் வருகை தந்தோருக்கும் மின்னஞ்சல் மூலமும் Valvettithurai.org, vvt.u.k, polikai.com, facebook, சைனிங்ஸ் club ஆகிய இணையதளங்களினூடாக எமது துயரை உலகம் முழுவதும் பகிர்ந்தோருக்கும், தொலைபேசி மூலமாக எமக்கு ஆறுதல் கூறியோருக்கும், பூமாலைகள், மலர்வளையங்கள் சாத்தி அஞ்சலி செய்தவர்களுக்கும் ஈழ மைந்தனாய் இனங்காட்டியோருக்கும், அஞ்சலிப் பிரசுரம் பிரசுரித்து, துயரைப் பகிர்ந்தோருக்கும், இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டோருக்கும் நன்றிகள் பல உரித்தாகட்டும்.
மிகப் பெருந்திரளான உற்றார், உறவினர், நண்பர்கள் எமது துயரில் பங்கு கொன்டமையல் தனித்தனியே நன்றிகளோ, அழைப்போ தெரிவிக்க முடியாமைக்கு வருந்தி இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் 31ம் நாள் கிரியைகளிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.