வல்வெட்டித்துறை - பருத்தித்துறை பிரதான வீதியில் மதவடிப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துகுள்ளானது. வல்வை சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே நேற்று நண்பகல் 1230 மணியளவில் விபத்துகுள்ளானது.
எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றிக்கு வழி விடும் வகையில், முச்சக்கர வண்டியின் சாரதி, வண்டியை ஓரத்திற்கு செலுத்த, வண்டியின் பின் சக்கரம் ஒன்று, வீதி திருத்துவதற்காக பிரதான வீதியில் போடப்பட்டிருந்த தார் குவியல் ஒன்றின் மேலாகச் சென்றதால் சமநிலை குலைந்து வண்டி முழுவதுமாக வீதியில் சாய்ந்தது.
அதிஸ்டவசமாக இதில் பயணித்த சாரதி உட்பட்ட இருவருக்கும் எதுவித காயங்களும் ஏற்படவில்லை. ஆனாலும் முச்சக்கர வண்டிக்கு சிறு சேதம் ஏற்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.