2004 சுனாமியில் பலியானோருக்கு நேற்று மணற்காட்டில் நடைபெற்ற அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2014 (சனிக்கிழமை)
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் பலியானோருக்கு நேற்று வடமராட்சி கிழக்கில் அமைந்தள்ள மணற்காட்டில் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன.
மணற்காட்டில் அமைந்துள்ள சவக்காலப்பிட்டியில் மணற்காடு புனித அந்தோனியார் ஆலய பங்குத் தந்தை எல்மோ அருள்நேசன் அடிகளாரால் திருப்பணி ஒப்புக்கொடுக்கப்பட்டு அவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சவக்காலப்பிட்டியில் சுனாமி அனர்த்தத்தில் பலியான 72 பேர் அடக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.