இலங்கையில் முதன் முறையாக 101 1/4 அடி புகைக்குண்டு நாளை வானில் ஏவப்படுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2018 (சனிக்கிழமை)
நடைபெற்று வரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா மற்றும் அதனையொட்டி இடம்பெறும் இந்திர விழாவும் நாளை இடம்பெறவுள்ளது.
இந்திரவிழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் இந்திர விழா இடம்பெறும் பிரதான பகுதியில் நெடியகாட்டில் 101 1/4 அடி உயரமுடைய ராட்சத புகைக்குண்டு வானில் ஏவப்படவுள்ளது.
இலங்கையில் இவ்வாறானதொரு புகைக்குண்டு வானில் ஏவப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த 101 1/4 அடி உயர புகைக்குண்டு நாளை இரவு 10 மணியளவில் நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோவில் மேற்கு வீதியில் வானில் ஏவப்படவுள்ளது.
101 1/4 அடி உயர புகைக்குண்டை விட 8 அடி, 40 அடி, 60 அடி உயரமுடைய ஏராளமான புகைக்குண்டுகளும் நெடியகாட்டில் ஏவப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.