வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல், வானிலிருந்தும் மலர் தூவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2014 (திங்கட்கிழமை)
பிரசித்திபெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல்திருவிழா இன்று மாலை மிகவும் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. இன்றைய திருவிழாவில் எதிர்பாரத்தது போலவே ஏராளமான பக்தர்கள் நாட்டின் குறிப்பாக வடபகுதியின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ளனர்.
ஆலய வளாகத்தில் நூற்றுக் கணக்காக பொங்கல் பானைகளைக் காணக் கூடியதாகவுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வுகளில் வானூர்தியிலிருந்து ஆலயத்தின் மேலாக மலர்கள் தூவப்பட்டிருந்தன.
கீழே படங்களில் இன்றைய பொங்கல் திருவிழாவின் ஆரம்ப காட்சிகள் சிலவற்றைக் காணலாம். எமது முழுப் படத் தொகுப்பு பின்னர் இணைக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.