வல்வை நகரசபை தேர்தலில் முன்னாள் உறுப்பினர்களில் இருவரைத்தவிர ஏனையோர் மீண்டும் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2017 (வியாழக்கிழமை)
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்களில் நகரசபை உறுப்பினர்களாக தெரிவான இருவரைத் தவிர ஏனைய அனைவரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
கடந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு தெரிவான கந்தசாமி சதீஸ், கனகராசா ஜெயராசா, கோணலிங்கம் கருணானந்தராசா மற்றும் மகாலிங்கம் மயூரன் ஆகியோர் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே போட்டியிடுகின்றனர்.
கடந்த முறை ஈபிடிபியில் போட்டியிட்டு தெரிவான பொன்னுத்துரை தெய்வேந்திரன் இந்த முறை பொது ஜன பெரமுனவில் போட்டியிடுகின்றார்.
கடந்த முறை ஈபிடிபியில் போட்டியிட்டு தெரிவான கைலாஜினி இந்திரன் மீண்டும் ஈபிடிபியில் போட்டியிடுகின்றார்.
கடந்த முறை தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு தெரிவான திரு.சிவாஜிலிங்கம் தற்பொழுது வட மாகாணசபை உறுப்பினராக உள்ளதால் இந்த முறை போட்டியிடவில்லை.
கடந்த முறை தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு தெரிவான அனந்தராஜ் இந்தமுறை தேர்தலில் போட்டியிடவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.