காலை கொடியிறக்கத்துடன் வல்வை அம்மன் வருடாந்த மகோற்சவம் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று காலை சுமார் 0500 மணியளவில் கொடியிறக்கத்துடன் நிறைவெய்தியது. கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்தோற்சவம் நேற்று காலை இடம்பெற்று, இன்று அதிகாலை சுமார் 1230 மணி வரை அம்பாள் நெடியாகாட்டில் தங்கியிருந்தார்.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அம்பாள் தான் கோயில் வந்தவுடன் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடந்து சுமார் 8 மணியளவில் கோயில் கோபுரத்தில் கடந்த 15 தினங்களாக வருடாந்த மகோற்சவததை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கொடி இறக்கப்பட்டு மகோற்சவம் இனிதே நிறைவெய்தியது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.