Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

திருமலை கடற்படைத் தளத்தில் நிலக்கீழ் இரகசிய தடுப்பு முகாம் - காணாமலாக்கப்பட்டோர் அமைப்பின் நிபுணர்கள்

பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2015 (வியாழக்கிழமை)

திருகோணமலை கடற்படை தளத்திலுள்ள நிலக்கீழ் இரகசிய தடுப்பு முகாமில் பெரும் எண்ணிக்கையானோர் நீண்டகாலம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டிருப்பதனை தம்மால் புரிந்துகொள்ள முடிந்திருப்பதாக இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் அமைப்பின் நிபுணர்கள் நேற்று தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் இது உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்தாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பல உயிர்கள் இழந்திருக்க கூடும் என நம்பப்படும் வகையில் மிகவும் பாரதூரமான விசாரணைகள் இங்கு நடைபெற்றிருக்கலாமென தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலக்கீழ் இரகசிய தடுப்பு முகாம்களில் சித்திரவதை இடம்பெற்றிருக்குமா? என்பதனை ஊர்ஜிதம் செய்ய முடியாதுள்ள போதும் இவை உத்தியோகபூர்வ தடுப்பு முகாமொன்று அமைய வேண்டிய முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் வடிவமைக்கப்ப ட்டிருந்ததை தங்களால் நேரில் பார்க்க முடிந்ததாக இப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். காணாமலாக்கப்படுவது சர்வதேச சட்டத்தின்படி குற்றச்செயலாகும். இந்நிலையில், தரக்குறைவான இரகசிய முகாமொன்றில் தடுத்து வைக்கப்படுவது மனித உரிமை மீறலாகுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பத்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த மேற்படி பிரதிநிதிகள் குழு தமது பயணத்தின் இறுதி நாளான நேற்று கொழும்பிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

“எமது விஜயத்தின் ஒரு பாரிய கண்டுபிடிப்பாகவே இந்த நிலக்கீழ் இரகசிய தடுப்பு முகாமை நாம் கருதுகின்றோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தார் வழங்கிய தகவல்களுக்கமைவாகவே எம்மால் இந்த முகாமை சென்றடைய முடிந்தது. சி.ஐ.டி. அதிகாரியொருவர் எம்மை அங்கு அழைத்துச் சென்று விசாரணைகள் நடத்தப்பட்ட இடங்களை காண்பித்தார்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை கடற்படை தளத்தின் நிலக்கீழ் இரகசிய தடுப்பு முகாமின் சுவர்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களால் கூடுதலாக எழுதப்பட்டிருந்தன. அங்கே “20107025” என்ற இலக்கத்தை நாம் கண்டோம். இது 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதியை குறிக்குமென நாம் நம்புகின்றோம். இதனடிப்படையில் 2009 ஆம் ஆண்டே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதால் இவர்கள் ஆகக்குறைந்தது 2010 ஆம் ஆண்டு வரையிலாயினும் இங்கே தடுத்து வைத்திருக்க வேண்டுமென எம்மால் ஊகிக்க முடிகிறது என்றும் ஐ.நா. பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

கடற்படை தளத்தின் நிலத்துக்கு கீழாகவே இந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் உள்துழைவாயில் பிறர் அறியாத வகையில் மர்மமான முறையில் காணப்பட்டது. இதற்குள் ஒருவர் அழைத்துச் செல்வதனை வெளியிலிருந்து எவராலும் பார்க்க முடியாது. ஒரு கட்டடத்தில் நிலத்துக்கு கீழ் சுமார் 12 சிறைக்கூடங்கள் காணப்பட்டன. அவ்வாறு நாம் குறித்த வளாகத்தில் மூன்று கட்டடங்களைக் கண்டோம். மேலும் பல சிறைக் கூடங்கள் அமைந்திருக்க கூடும் என்றே நம்புகின்றோம்.

இந்த இரகசிய சிறைகள் மிகவும் நுட்பமான முறையில் அமைந்திருந்தன. தடுத்து வைக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் ஓய்வும் வழங்கப்பட்டிருக்கலாம். 2009 ஆம் ஆண்டே அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதனால் 2010 வரையில் பெரும் எண்ணிக்கையானோர் இந்த இரகசிய முகாமில் தடுத்து வைத்திருக்கக்கூடும். என்ற போதும் இவர்களின் எண்ணிக்கை இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தை எம்மால் திருத்தமாக கூற முடியாதுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குடும்பத்தார் கூறுவதன்படி, தடுத்து வைக்கப்பட்டோர் இரகசிய முகாமிற்குள் அழைத்துச் செல்லப்படும் வரையில் அட்டைகளின் உபயோகத்துடன் இவர்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். அதன் பின்னரே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுமார் 20 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். திருகோணமலையைப் போன்று பல தடுப்பு முகாம்கள் நாட்டில் இருக்கக்கூடும். என்ற போதும் அவை குறித்து விசாரணை நடத்த போதுமான தகவல்கள் எம்மிடம் இருக்கவில்லை. எனவே, அரசாங்கம் காணாமல் போனோர் காணாமலாக்கப்பட்டோர், இரகசிய தடுப்பு முகாம்கள், புதைகுழிகள் பற்றிய சரியான தகவல்களை எமக்கு அறியத்தர வேண்டும்.

இதேவேளை, இலங்கையில் காணாமல்போனோர் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள், அவர்களுக்கு என்ன நடந்திருக்குமென நீடித்து வந்த கேள்விக்கு திருகோணமலை இரகசிய தடுப்பு முகாம் மூலம் ஓரளவு பதில் கிடைத்துள்ளதெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரதிநிதிகள் குழுவில் பெர்னார்ட் டூஹேய்ம், டி-யுங்பைக், ஏரியல் டுலிட்ஸ்கி ஆகியோர் அங்கம் வகித்து கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. நிபுணர் குழுவின் வலியுறுத்தல்

காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் அவர்களுக்கான உண்மையை அறியத்தரும் நம்பகத்தன்மை நிறைந்த ஆக்கபூர்வமான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான உரிய தருணம் இதுவே எனவும் ஐ.நா. நிபுணர்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. இதில் நேர்மறையான செயற்பாடுகளை அவதானிக்க முடிந்த போதும் காலக்கெடு முடிவடைந்து விட்டதனால் அரசாங்கம் தமது செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும் இந்நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியது.

காணாமல் போனோரின் உறவினர்களிடையே நம்பிக்கை கட்டியெழுப்பப்படும் நிலையிலேயே நல்லிணக்கச் செயற்பாடுகள் வெற்றியடைந்ததாக கருத முடியுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சுதந்திரமானதொரு அமைப்பு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அரசாங்கத்தினால் இதற்கென ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டிருப்பதனை நாம் வரவேற்கின்றோம். எனினும் அதன் செயற்பாடுகள் அரசாங்க செயற்பாடுகளை மாத்திரம் மையப்படுத்துவது முழு சமூகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருத்தல் வேண்டும். இதன் செயற்பாடுகள் 03 மொழிகளிலும் அறிவிக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கூறினர்.

சுமார் 200 குடும்பத்தாருடன் நேர்காணலை மேற்கொண்டதாகவும் அவர்கள் சாட்சியங்கள் அளிக்கையில் அச்சுறுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தியதாகவும் தெரிவித்தனர். அநேகமான குற்றச்சாட்டுகள் சி.ஐ.டி.யினருக்கு எதிரானவை. எனவே, காணாமல்போனோரின் குடும்பத்தாருக்கு எவ்வித அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தல்களை வழங்கக்கூடாது என இராணுவம், பாதுகாப்பு மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அனைவருக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டம் சர்வதேச சட்டத்தின் தரத்திற் கமைவாக இல்லாமையினாலேயே பலரை இரகசியமாக தடுத்து வைத்து விசாரணை செய்யும் நிலை உருவானதால் அச்சட்டத்தை மறுசீரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

காணாமல்போனவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். பெண்களும் சிறுவர்களுமே அவர்களின் நலனுக்காக வரவு - செலவு திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

காணாமல் போனோருக்காக வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் காணாமல்போனோருக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட மரணச் சான்றிதழை மாற்றி காணாமல் போனோருக்கான சான்றிதழை அரசாங்கம் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். (தினகரன்)


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
பண்ணிசை, நடனக்கான வளவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
அனலைதீவில் சூரிய ஒளி காற்றாலை மின்சார உற்பத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2024 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் தனியாக பயணிக்க முதலாவது நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai